திண்டல் முருகனின் திருமுக தரிசனம்.
திண்டல் முருகனின் திருமுகத்தை அழகு பொலியும் அருள் முகத்தை தரிசனம் செய்யணும்னா நீங்க ஈரோட்டுக்குக் கட்டாயம் வந்தே ஆகணும். மலைமேல் குட்டி முருகன் உங்களை எதிர்நோக்கிக் காத்துக்கிட்டு இருக்கார்.
“முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே. “
”கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே என்றொரு சினிமாப் பாட்டு உண்டு. இங்கே ஈரோடு பெருந்துறையிலிருந்து எட்டு கிலோமீட்டரில் குடிகொண்டிருக்கும் குழந்தை வேலாயுதசாமி கோயிலில் இடும்பனும் வணங்கப்படுகிறார். இடும்பனின் மூலம் தமது கோரிக்கைகளைத் தெரிவித்துப் பக்தர்கள் முருகன் அருள் பெறுகிறார்கள்.
திண்டல் முருகன் கோயில் சிறு குன்றின்மேல் அமைந்திருக்கிறது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்தானே. குன்றுதோறாடல்தானே அவனது திருவிளையாடல்.
