எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 பிப்ரவரி, 2021

கோபுர தரிசனம்.

கோபுர தரிசனம்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள். கோயிலுக்குச் செல்ல இயலாவிட்டாலும் ஆறு கால பூஜைகளின் போதும் வீட்டிலிருந்தே ஜன்னல் வழி கோபுரங்களை தரிசிக்க முடியும் அம்மா வீட்டிலும், கணவரது பாட்டியாரின் வீட்டிலும் இருந்து.

நான் சென்ற சில கோயில்களின் கோபுரங்கள் உங்கள் தரிசனத்துக்காகப் பகிர்ந்திருக்கிறேன்.

இது பிள்ளையார் பட்டிக் கோயில். பிகநக விடுதியில் இருந்து எடுத்தது. கோபுரம் சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது.

இது காரைக்குடியின் கொப்புடைய அம்மன் கோயில் கோபுரம். மாலைநேர எதிர்வெய்யில் என்பதால் இரு புகைப்படங்களிலும் க்ளேரிங்.. வித்யாசமான கோபுரம். இதன் முன் பக்கங்களில் ஒரே கல்லில் தொங்கும் கல் சங்கிலிங்கள் - செயின்கள் செதுக்கி இருப்பாங்க. மிக அழகாக இருக்கும்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.