எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 செப்டம்பர், 2021

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

செவ்வாய், 4 மே, 2021

தஞ்சைப் பெரிய கோவில்.

தஞ்சைப் பெரிய கோவில்.

 தஞ்சைப் பெருவுடையார் கோவில் பற்றிப் பல்வேறு இடுகைகளில் குறிப்பிட்டுள்ளேன். இன்னும் கொஞ்சம் படங்களையும் அவை பற்றின தகவல்களையும் தருகிறேன். 



மாமன்னர் ராஜ ராஜன் சிலையேதான் !
கோவில் முன்புறக் கோபுரம். 
அகழி/மதில்.

கண்ணையும் கருத்தையும் கவரும் சிற்பத் தொகுதிகள் துவார பாலகரின் கீழ்ப் பத்தியில்




உக்கிர தேவதைகள்,உக்கிரக் காவல் தெய்வங்கள் கோலோச்சும் முன் வாயிற் கோபுரம்.

விநாயகர். 
அகழியில் நீர் இல்லை. ஆனாலும் புற்கள், புதர்கள் நிரம்பி மிரட்டலாய்த்தான் இருக்கு. 

காலணிக் காப்பகத்தில்விட்டு விட்டு வந்தபின் கோவிலின் உள்ளே நுழைந்தோம். 


தஞ்சைக் கோவிலின் பெருமை மிகு நந்தி. 

மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி அளித்தது. நான் எடுத்த மிக நல்ல ஃபோட்டோ ஒன்றும் இப்போது டைப் செய்யும் போது அழிந்து விட்டது. அதென்னவோ தெரியவில்லை லாப்டாப்பில் த, த், து இதெல்லாம் டைப் செய்யும் போது கர்சர் வேறெங்கோ போய் அவற்றைப் பிரசவிக்கிறது. அல்லது இருக்கும் படத்தை அழிக்கிறது.கஷ்டகாலமப்பா. எனக்கும் என் செல்ஃபோனுக்கும் லாப்டாப்புக்கும் வயசாகிவிட்டது. :) 



மேலே விதானமும் ஓவியக் காட்சிகளால் கவினுற அமைக்கப்பட்டிருந்தது. 

செம்புத் துவஜஸ்தம்பத்தில் விநாயகர். 




ஃபோட்டோக்கள் முன் பின்னாக அப்லோட் வேறு ஆகியுள்ளன. 

கோவிலுக்குள்ளே கோவில்களாக கருவூரார் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி, விநாயகர் சந்நிதி, முருகன்,நடராசர், வாராஹி அம்மன், பெரிய நாயகி அம்மன் ஆகியோருக்கு தனித்தனிச் சந்நிதிகள் கட்டப்பட்டுள்ளன.

பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாகச் சோழனின் கட்டிடக்கலையை எடுத்தியம்பும் இந்தக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு கண்டதும் ஆயிரம் ரூபாய் நோட்டில் அச்சாகி உள்ளது. தபால் தலையாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. 
தஞ்சைப் பெருவுடையார் கோவில் பற்றி நான் எழுதிய இந்த இரண்டு இடுகைகளையுமே பாருங்க. ஜகதிப்படை, மெய்கீர்த்தி, பாந்து, உலகப் பாரம்பரியச் சின்னம், இடைச்சி கல், வளரும் நந்தி, கல்வெட்டுக்கள், இறையிலி நிலங்கள், இயற்கைச் சாளரங்கள், சதயத்திருவிழா பற்றிய  விவரமும் கிடைக்கும். 


வியாழன், 25 மார்ச், 2021

காரடையான் நோன்புக் கோலங்கள்

 

காரடையான் நோன்புக் கோலங்கள்

காரடையான் நோன்புக் கோலங்கள்.



இந்தக் கோலங்கள் 18.3. 2021 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

மஹா சிவராத்திரிக் கோலங்கள்

 

மஹா சிவராத்திரிக் கோலங்கள்

 மஹா சிவராத்திரிக் கோலங்கள். 



இந்தக் கோலங்கள் 18.3. 2021 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

ஸ்ரீ மஹா கணபதிம். வந்தே அருள்வாய் கணபதியே.

ஸ்ரீ மஹா கணபதிம். வந்தே அருள்வாய் கணபதியே.

 ஸ்ரீமஹாகணபதிம். வந்தே அருள்வாய் கணபதியே. 

மாசி மகம் கோலங்கள்.

 

மாசி மகம் கோலங்கள்.

 மாசி மகம் கோலங்கள். 


ஆயுள் ஆரோக்கியக் கோலங்கள்

 

ஆயுள் ஆரோக்கியக் கோலங்கள்

ஆயுள் ஆரோக்கியக்  கோலங்கள். 


தைப்பூசம் கோலங்கள்.

தைப்பூசம் கோலங்கள்.

தைப்பூசம்  கோலங்கள். 

திங்கள், 1 பிப்ரவரி, 2021

கோபுர தரிசனம்.

கோபுர தரிசனம்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள். கோயிலுக்குச் செல்ல இயலாவிட்டாலும் ஆறு கால பூஜைகளின் போதும் வீட்டிலிருந்தே ஜன்னல் வழி கோபுரங்களை தரிசிக்க முடியும் அம்மா வீட்டிலும், கணவரது பாட்டியாரின் வீட்டிலும் இருந்து.

நான் சென்ற சில கோயில்களின் கோபுரங்கள் உங்கள் தரிசனத்துக்காகப் பகிர்ந்திருக்கிறேன்.

இது பிள்ளையார் பட்டிக் கோயில். பிகநக விடுதியில் இருந்து எடுத்தது. கோபுரம் சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது.

இது காரைக்குடியின் கொப்புடைய அம்மன் கோயில் கோபுரம். மாலைநேர எதிர்வெய்யில் என்பதால் இரு புகைப்படங்களிலும் க்ளேரிங்.. வித்யாசமான கோபுரம். இதன் முன் பக்கங்களில் ஒரே கல்லில் தொங்கும் கல் சங்கிலிங்கள் - செயின்கள் செதுக்கி இருப்பாங்க. மிக அழகாக இருக்கும்.

வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஈஷா யோகாவும், லிங்க பைரவி பூஜையும்

 ஈஷா யோகாவும், லிங்க பைரவி பூஜையும்

வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில்  இருக்கும் ஈஷா யோகப் பயிற்சி மையத்துக்குச் சென்றதுண்டு. யோகா கற்றுக் கொள்ளவில்லை. அங்கே இருக்கும் தியானலிங்கத்தைத் தரிசிக்கத்தான்.

வியாழன், 28 ஜனவரி, 2021

கல்லுக்குழி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர்.

கல்லுக்குழி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர்.

 ஸ்ரீ ராம தூத மஹாதீர ருத்ரவீர்ய சமப்ரப
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் வாயு புத்ர நமோஸ்துதே !

திருச்சி கல்லுக்குழியில் இருக்கும் ஆஞ்சநேயரைத் தரிசித்ததில்லையா. வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்து இன்புற வேண்டியவர் இந்த ஆஞ்சநேயர். சுந்தரமாகக் காட்சி தரும் மூலவரையும் உற்சவரையும் ஒரு சனிக்கிழமை மாலை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என சுந்தரரின் காட்சி இன்பத்தைப் பகிர்ந்துள்ளேன். 


புதன், 27 ஜனவரி, 2021

மந்திராலயம் - 2.

 மந்திராலயம் - 2.

ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்தில் வெளித்தாழ்வாரத்தில் காத்துக் கிடக்கிறோம். அவரை தரிசித்ததைப் பற்றிக் கூறுகிறேன். 



சமஸ்கிருதம், வேதம், வீணை வாசிப்பு ஆகியவற்றில் புலமைபெற்றவர் ராகவேந்திர மகான்.

திங்கள், 25 ஜனவரி, 2021

மந்திராலயம்.

மந்திராலயம்.

ஹைதையில் இருக்கும்போது ( 2014 ) மந்திராலயம் செல்வதென முடிவாயிற்று. இதற்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். 1992 இல் . கர்நாடக ஆந்திரா எல்லையில் இருக்கும் மந்திராலயம் எங்கள் மனங்கவர்ந்த ஊர். 

சிதம்பரத்தில் இருக்கும்போதே வாராவாரம் வியாழனன்று புவனகிரிக்குச் சென்று ( இராகவேந்திரர் திருவேங்கடநாதராகப் பிறந்தஸ்தலம் ).  வணங்கி வந்திருக்கிறோம் நானும் சங்கரி மாமியும். 


பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இம்மகானின்மேல் அபரிமித பக்தி உண்டு. 

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

குவாலியர் சூரியனார் ரதக்கோவில்.

குவாலியர் சூரியனார் ரதக்கோவில்.

குவாலியர் சூரியனார் கோவில் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். 

குவாலியரில் மொரார் என்னுமிடத்தில் இது அமைந்திருக்கிறது. சூரியனுக்காகவே அமைக்கப்பட்ட கோவில்களில் இது முக்கியமானது. பிர்லா மந்திர் எல்லாம் பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்க இதுவோ சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. வெகு தேஜஸான கோயிலை ஒருமுறை வலம் வருவோம் வாங்க. சுத்தி தோட்டம் வேறு அழகூட்டுகிறது. கூடவே மயிலும் புறாக்களும். 



கம்பீரமா நிற்கும் இந்தக் கோவிலில் முன் கூடம் ஒன்றும் கருவறை ஒன்றும் உள்ளது. கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது கோவில். 

வியாழன், 21 ஜனவரி, 2021

வெள்ளி மயிலில் வேல் முருகன்.

வெள்ளி மயிலில் வேல் முருகன்.

கார்த்திகை பூசையின்போது வெள்ளி மயிலில் வேல்முருகன் எழுந்தருளுவார். கார்த்திகை சோம வாரங்களில் நடைபெறும் பூசையின்போது தண்டாயுதத்துக்கும் வேலுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதன்பின் வெள்ளிமயிலில் வேல்முருகனை வைத்து அலங்கரிப்பார்கள். இருபக்கமும் மயில்தோகையும் தண்டாயுதமும் வேலும் வைக்கப்படும். இரு குத்துவிளக்குகளும் ஏற்றி வைக்கப்படும். காலையிலிருந்து சாமிக்குப் படையல் தீப தூபம் ஆகும்வரை ஒருவர் மாற்றி ஒருவர் முருகன் பாமாலைகள் பாட மற்றவர்களும் பின் தொடர்வார்கள். வீடே முருகன் அருளால் விபூதியோடு மணக்கும்.

முதலில் விநாயகப்பானையில் பொங்கலிடுவார்கள். இது இரட்டைப் பானையாகப் பொங்கப்படும். அதன்பின் பூசைச்சாப்பாடு ஏழெட்டுக் காய்கறி வகைகளுடன் தயாராகும். பருப்பு மசியல், கத்திரி முருங்கை அவரைகாய் சாம்பார், முட்டைக்கோஸ் துவட்டல், சௌ சௌ கூட்டு, பரங்கிக்காய் புளிக்கறி, வாழைக்காய் பொடிமாஸ், கருணைக்கிழங்கு மசியல், வெண்டைக்காய் மொச்சை மண்டி, ரசம், பலாக்காய் பிரட்டல், மோர், பாயாசம், வடை, அப்பளம் ஆகியன இடம்பெறும்.

சாதத்தை வடித்துப் பெரிய ஓலைப்பாயில் கொட்டி வைப்பார்கள். விநாயகப்பானைக்கும், சாதம், பொரியல், கூட்டு குழம்பு வகையறாவுக்கும் தூப தீபம் பார்த்தபின் முருகனுக்கு எதிரில் படையல் இடப்படும். பண்டாரம் வந்து சங்கு ஊதி தீபம் காட்ட அனைவரும் வணங்குவார்கள். பெண்கள் மாவிளக்கு வைப்பார்கள். ( அது அடுத்த இடுகையில்) . அதன் பின் ஊரோடு அனைவரும் உணவருந்திச் செல்வார்கள்.

மாலையில் பான(க்)க பூசை நடைபெறும். பூசைக்குழம்பை ( மிஞ்சிய அனைத்தையும் ஒன்றாக்கிச் சுடவைத்து ) புள்ளிக்கணக்குக்கு ஏற்பக் கொடுப்பார்கள்.

விடையேறுபாகன்.
வள்ளி தெய்வானை சமேத மயில்வாகனன்.

புதன், 20 ஜனவரி, 2021

பலவான்குடி நகரச் சிவன்கோவிலில் தெய்வீகச் சிற்பங்கள்.

பலவான்குடி நகரச் சிவன்கோவிலில் தெய்வீகச் சிற்பங்கள்.

பலவான்குடி நகரச் சிவன்கோவில் 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த வருடம் ஒன்பதாவது முறையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.பலவான்குடிப் பெருமக்கள் ஊரோடு உணவிட்டு மகிழ்ந்தனர். கும்பாபிஷேகத்திலும் பல்வேறு சிறப்புகள்.

ஐந்து நிலை ராஜகோபுரம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. மீனாக்ஷி சுந்தரேசுவரர் சந்நிதி எதிரே அனைத்துத் தெய்வீகச் சிற்பங்களும் சுதைச் சிற்பங்களாய் இடம்பெற்றுள்ளது சிறப்பு.

நால்வருடன் காரைக்காலம்மையாரும் பட்டினத்தாரும் கூட இடம்பெற்றிருக்கிறார்கள். பள்ளி கொண்ட பெருமாளும் சிவன் சந்நிதியின் முன்புறம் வலப்பக்கமாக எழுந்தருளி இருக்கிறார்.


முந்தி முந்தி விநாயகன் முன்னிருந்து வரவேற்கிறான். சிதம்பரத்தின் ஆடலரசரன் ஓவியமாக ஊழிக் கூத்தில்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.