ஈஷா யோகாவும், லிங்க பைரவி பூஜையும்
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 29 ஜனவரி, 2021
வியாழன், 28 ஜனவரி, 2021
கல்லுக்குழி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர்.
கல்லுக்குழி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர்.
ஸ்ரீ ராம தூத மஹாதீர ருத்ரவீர்ய சமப்ரப
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் வாயு புத்ர நமோஸ்துதே !
திருச்சி கல்லுக்குழியில் இருக்கும் ஆஞ்சநேயரைத் தரிசித்ததில்லையா. வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்து இன்புற வேண்டியவர் இந்த ஆஞ்சநேயர். சுந்தரமாகக் காட்சி தரும் மூலவரையும் உற்சவரையும் ஒரு சனிக்கிழமை மாலை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என சுந்தரரின் காட்சி இன்பத்தைப் பகிர்ந்துள்ளேன்.
புதன், 27 ஜனவரி, 2021
திங்கள், 25 ஜனவரி, 2021
மந்திராலயம்.
மந்திராலயம்.
ஞாயிறு, 24 ஜனவரி, 2021
குவாலியர் சூரியனார் ரதக்கோவில்.
குவாலியர் சூரியனார் ரதக்கோவில்.
வியாழன், 21 ஜனவரி, 2021
வெள்ளி மயிலில் வேல் முருகன்.
வெள்ளி மயிலில் வேல் முருகன்.
முதலில் விநாயகப்பானையில் பொங்கலிடுவார்கள். இது இரட்டைப் பானையாகப் பொங்கப்படும். அதன்பின் பூசைச்சாப்பாடு ஏழெட்டுக் காய்கறி வகைகளுடன் தயாராகும். பருப்பு மசியல், கத்திரி முருங்கை அவரைகாய் சாம்பார், முட்டைக்கோஸ் துவட்டல், சௌ சௌ கூட்டு, பரங்கிக்காய் புளிக்கறி, வாழைக்காய் பொடிமாஸ், கருணைக்கிழங்கு மசியல், வெண்டைக்காய் மொச்சை மண்டி, ரசம், பலாக்காய் பிரட்டல், மோர், பாயாசம், வடை, அப்பளம் ஆகியன இடம்பெறும்.
சாதத்தை வடித்துப் பெரிய ஓலைப்பாயில் கொட்டி வைப்பார்கள். விநாயகப்பானைக்கும், சாதம், பொரியல், கூட்டு குழம்பு வகையறாவுக்கும் தூப தீபம் பார்த்தபின் முருகனுக்கு எதிரில் படையல் இடப்படும். பண்டாரம் வந்து சங்கு ஊதி தீபம் காட்ட அனைவரும் வணங்குவார்கள். பெண்கள் மாவிளக்கு வைப்பார்கள். ( அது அடுத்த இடுகையில்) . அதன் பின் ஊரோடு அனைவரும் உணவருந்திச் செல்வார்கள்.
மாலையில் பான(க்)க பூசை நடைபெறும். பூசைக்குழம்பை ( மிஞ்சிய அனைத்தையும் ஒன்றாக்கிச் சுடவைத்து ) புள்ளிக்கணக்குக்கு ஏற்பக் கொடுப்பார்கள்.
விடையேறுபாகன்.
வள்ளி தெய்வானை சமேத மயில்வாகனன்.
புதன், 20 ஜனவரி, 2021
பலவான்குடி நகரச் சிவன்கோவிலில் தெய்வீகச் சிற்பங்கள்.
பலவான்குடி நகரச் சிவன்கோவிலில் தெய்வீகச் சிற்பங்கள்.
ஐந்து நிலை ராஜகோபுரம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. மீனாக்ஷி சுந்தரேசுவரர் சந்நிதி எதிரே அனைத்துத் தெய்வீகச் சிற்பங்களும் சுதைச் சிற்பங்களாய் இடம்பெற்றுள்ளது சிறப்பு.
நால்வருடன் காரைக்காலம்மையாரும் பட்டினத்தாரும் கூட இடம்பெற்றிருக்கிறார்கள். பள்ளி கொண்ட பெருமாளும் சிவன் சந்நிதியின் முன்புறம் வலப்பக்கமாக எழுந்தருளி இருக்கிறார்.
முந்தி முந்தி விநாயகன் முன்னிருந்து வரவேற்கிறான். சிதம்பரத்தின் ஆடலரசரன் ஓவியமாக ஊழிக் கூத்தில்.
செவ்வாய், 19 ஜனவரி, 2021
முருகன் பூசையும் மழலைகளின் குறும்பும்.
முருகன் பூசையும் மழலைகளின் குறும்பும்.
திங்கள், 18 ஜனவரி, 2021
யாகசாலை - பலவான்குடி சிவன் கோவில்.
யாகசாலை - பலவான்குடி சிவன் கோவில்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் விதம் விதமான யந்திரங்கள் மந்திரங்கள் இருப்பதுபோல் விதம் விதமான ஷேப்பில் ஹோம குண்டங்கள் வண்ண வண்ணமான வடிவங்களில் கண்ணைக் கவர்ந்தன. ( அக்னிதான் எல்லா அவிர்பாகங்களையும் எல்லா தேவதைகளுக்கும் கொண்டு சேர்ப்பவர். பொதுவாக நன்கு உலர்ந்த சமித்துக்களையும் சாண உருண்டைகளையும் பயன்படுத்த வேண்டும். விதம் விதமான உருவங்களில் அந்தந்த ஹோம குண்டங்களில் தெய்வக் காட்சியைக் காணலாம். ஹோமம் செய்யும்போது கண் கலங்கி ஓடும் அளவு நெருப்பே இல்லாமல் புகை வரக் கூடாது. )
ஒவ்வொரு சாமிக்கும் தனித்தனி யாக சாலை. ஒவ்வொரு காவல் தெய்வமும் கூட.
ஞாயிறு, 17 ஜனவரி, 2021
இரணிக்கோவிலின் சிற்பக்கூட்டம்.
இரணிக்கோவிலின் சிற்பக்கூட்டம்.
இங்கே இருக்கும் பைரவருக்கு ஷண்பக சூர சஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் மூன்று கல் தூண்கள் நிறுவப்பட்டு மழை நீர் சேகரிப்பும் அந்தக் காலத்திலேயே செய்யப்பட்டுள்ளது.
இன்னும் ராட்டையும் தேசியக் கொடியும் காந்தி அடிகளுமே விதானச் சிற்பமாக இருந்த அதிசயத்தையும் பார்த்தோம்.
இனி தூண்களிலும் பக்கச் சுவர்களிலும் இருக்கும் எழிலார்ந்த சிற்பத்தொகுதிகளைப் பார்ப்போம்.
கம்பீரமான ஐந்துநிலை ராஜகோபுரம் இக்கோவிலின் எழிலுக்கு முதல் சாட்சி. முன்னே இருப்பது அஷ்டலெக்ஷ்மி மண்டபம்.
கருவறையில் அபிஷேகம், அலங்காரம், ஆட்கொண்ட நாதருக்கு.
வியாழன், 14 ஜனவரி, 2021
யட்சிணிகளும் யட்சர்களும் சிம்மயாளியும்.
யட்சிணிகளும் யட்சர்களும் சிம்மயாளியும்.
புதன், 13 ஜனவரி, 2021
காரைக்குடி வள்ளலார் திருக்கோயில்.
காரைக்குடி வள்ளலார் திருக்கோயில்.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி
என்று ஜோதியையே ஈசனாக வழிபட்ட வள்ளலார் கோயிலை நெய்வேலி அருகிலுள்ள வடலூரில் கண்டதுண்டு. தைப்பூசத்தன்று சென்று தரிசிக்க வாய்த்ததில்லை. ஆறு திரைகள் விலக்கி ஜோதியாய் இருக்கும் ஈசனைத் தீப தரிசனத்தில் தரிசிக்கலாம் என்றார்கள். நாம் ஆறு திரைக்குமுன் இருந்த தீபத்தையே ஈசனாக வணங்கி வந்தோம்.
காரைக்குடி செஞ்சை பெருமாள் கோவில் எதிரில் இருக்கும் இந்த வள்ளலார் ஆலயத்தைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது ஒருமுறை.
செவ்வாய், 12 ஜனவரி, 2021
திங்கள், 11 ஜனவரி, 2021
நவநதிகள் சங்கமித்த தீர்த்தக்குளம்.
நவநதிகள் சங்கமித்த தீர்த்தக்குளம்.
கும்பகோணம் காசி விசுவநாதர் விசாலாட்சி கோவிலுக்கு எதிரில் அமைந்திருக்கு இந்த மகாமகக் குளம். குளத்துக்கு நாற்புறமும் படித்துறை இருக்கும். இங்கோ குளத்தின் எல்லாப் பக்கமும் மண்டபங்களும் படித்துறையுமா இருக்கு. குட்டியும் பெரிசுமா கிட்டத்தட்ட 20க்குமேலே மண்டபம் அல்லது கோவில்களும் அதன் பக்கங்களில் படித்துறையுமா இருக்கு. இந்தப் படிகளும் சும்மா கட்டுக்கோப்போட மூணு மூணாக் கட்டப்பட்டிருக்கு.
மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று இத்திருக்குளத்தில் நீராடினாலோ கும்பம் சொரிந்து கொண்டாலோ மிகுந்த விசேஷம். சிம்மராசிக்காரர்களுக்கு சிறப்புத்தரும் கோயிலும் குளமும் இது. மகா கும்ப மேளா போல் இங்கே மாசிமகம் சிறப்பு.
வெள்ளி, 8 ஜனவரி, 2021
புதன், 6 ஜனவரி, 2021
செவ்வாய், 5 ஜனவரி, 2021
திங்கள், 4 ஜனவரி, 2021
ஞாயிறு, 3 ஜனவரி, 2021
யூ ட்யூபில் 581 - 590 வீடியோக்கள். கோலங்கள்.
யூ ட்யூபில் 581 - 590 வீடியோக்கள். கோலங்கள். 581.கோலங்கள்_1 l குழந்தைகள் ஸ்பெஷல் கார்ட்டூன் கோலங்கள் l தேனம்மை லெக்ஷ்மணன் https://www.youtu...
-
குன்றக்குடியின் சுப்புலெட்சுமி . பள்ளி முழுப்பரிட்சை விடுமுறை தினங்களில் காரைக்குடி வரும்போது குன்றக்குடிக்குப் பாதயாத்திரையாக அத்தைமக்கள் அ...
-
திருப்புகழைப் பாடப் பாட.. சில மாதங்களுக்கு முன்பு இல்லத்தில் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. முருகப் பெருமானின் மேல் அருணகிரிநாதர் பக்தி கெ...
-
சொக்கேட்டான் கோயில் சொக்கேட்டான் கோயில், சொற்கேட்ட விநாயகர் ,சொற்கேட்டான் கோயில், சொல் கேட்ட ஐயா ஆகிய பெயர்களோடு விளங்கும் விநாயகரை சில...