எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

திங்கள், 29 ஏப்ரல், 2019

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

குமுதம் பக்தி ஸ்பெஷலில் கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள்.

வைகாசி மாதம் திருமண மாதம். கிரகப் பிரவேசங்களும் நடைபெறும். அந்தச் சமயம் வாசலில் காவிக் கோலமிட்டு திருஷ்டி சுற்றி ஆலத்தி எடுத்துக் கொட்டுவார்கள். எனவே இந்தக் கோலங்களை வரைந்தேன்.


இந்தக் கோலங்கள் ஜூன் 1 - 15 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளி வந்தது.

வியாழன், 25 ஏப்ரல், 2019

குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள் & வாசகியின் கடிதம்.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள் & வாசகியின் கடிதம்.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள்.

பிள்ளையாருக்குப் போடும் எருக்கம் பூ திருஎருக்கத்தம்புலியூரின் ஸ்தலவிருட்சம்.  ராங்கியம் கருப்பருக்கு உகந்த உறங்காப் புளி, திருக்குற்றால நாதருக்கு உகந்த பலாமரம்.


திருவாலங்காட்டின் ரத்ன சபாபதியும் ஆலமரமும், திருமணஞ்சேரியின் ஊமத்தம் செடியும் திருமாங்கல்யமும்.

பெங்களூரைச் சேர்ந்த ராஜிராதாவின் வாசகர் கடிதத்துக்கும் மிக்க நன்றி.

புதன், 24 ஏப்ரல், 2019

ஆரோக்கியக் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

 ஆரோக்கியக் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.

ஆரோக்கியக் கோலங்கள் .

ஆரோக்கியமாக இருக்கவும் நீண்ட ஆயுள் பெறவும் துளசி, வேப்பிலை, நெல்லிக்கனி முக்கியம். மேலும் அரசமரத்தைச் சுற்றுவதாலும் நல்ல காற்று கிடைக்கும்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

சித்திரைக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்

சித்திரைக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்

தேருபார்க்க வந்திருக்கும் சித்திரைப் பெண்ணே .. அப்பிடிங்கிற பாட்டைக் கேட்டிருக்கலாம்.

திங்கள், 22 ஏப்ரல், 2019

முருகன் சிறப்புக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில் .

முருகன் சிறப்புக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில் .

குமுதம் பக்தி ஸ்பெஷலில் மார்ச் 15 - 31 , 2013 இல் வெளிவந்த கோலங்கள் இவை.

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

சிவராத்திரி ஸ்பெஷல் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்

சிவராத்திரி ஸ்பெஷல் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்

சிவராத்திரியை ஒட்டி ஸ்பெஷலாக வரைந்த  கோலங்கள்  மார்ச் 1-15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.

வியாழன், 18 ஏப்ரல், 2019

காக்கைக் கோலமும் படிக்கோலமும்.ஸ்வஸ்திக்கும்.

காக்கைக் கோலமும் படிக்கோலமும்.ஸ்வஸ்திக்கும்.

ஃபிப்ரவரி 16-28 குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில்வெளியான கோலங்கள்.

ஸ்வஸ்திக் கோலம், பூ இலைக் கோலம், படிக்கோலம் , புள்ளிக் கோலம், காக்கைக்கோலம் , இன்னொரு விதமான ஸ்வஸ்திக் கோலம் மற்றும் தாமரைக் கோலம்.

புதன், 17 ஏப்ரல், 2019

குமுதம் பக்தி ஸ்பெஷலில் பூஜையறைக் கோலங்கள் --2

குமுதம் பக்தி ஸ்பெஷலில் பூஜையறைக் கோலங்கள் --2

குமுதம் பக்தி ஸ்பெஷல் ஃபிப் 1 - 15 இதழில் முருகனுக்குகந்த நட்சத்திரக் கோலம்--  ஓம் சரவணபவ கோலம்.,  அம்பாரியோடு உலாவரும் யானைக் கோலம், மற்றும் ஒளிவிடும் தீபங்கள்  கோலம்.


நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

குமுதம் பக்தி ஸ்பெஷலில் பொங்கல் கோலங்கள்.

 குமுதம் பக்தி ஸ்பெஷலில் பொங்கல் கோலங்கள்.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் கோலங்கள் .

பொங்கல் என்பதனால் பெரிய கோலங்கள்.

திங்கள், 15 ஏப்ரல், 2019

செல்வ வளம் நல்கும் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில் .. அட்சய திரிதியை ஸ்பெஷல்.

செல்வ வளம் நல்கும் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில் .. அட்சய திரிதியை ஸ்பெஷல்.

 செல்வ வளம் நல்கும் கோலங்கள்.இந்தக் கோலங்கள் அருளும் பொருளும் வழங்க வல்லவை.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

குமுதம் பக்தி ஸ்பெஷலில் பூஜையறைக் கோலங்களும் பொங்கல் கோலங்களும்.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் பூஜையறைக் கோலங்களும் பொங்கல் கோலங்களும்.

தினமும் நாம் வாசல் தெளித்துக் கோலமிட்டாலும் மார்கழி மாதக் கோலங்கள் என்றால் கொஞ்சம் ஸ்பெஷல்தான். கண்விழித்து விடியற்காலையில் எழுந்து அக்கம் பக்கத்து வீட்டாரை விட ஒரு இஞ்சாவது பெரிதாகக் கோலமிட்டு வண்ணமிட்டால்தான் திருப்தி நமக்கு.

குமுதம் பக்தி ஸ்பெஷலின் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழில் பொங்கல் கோலம், புள்ளிக் கோலத்தில் அன்னம் , கிளி கொஞ்சுகிறது.

வியாழன், 11 ஏப்ரல், 2019

குமுதம் பக்தி ஸ்பெஷலில் கோலங்கள்.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் கோலங்கள்.

குமுதம் பக்தி ஸ்பெஷலுக்காக மார்கழி மாதப் புள்ளிக் கோலங்கள் கேட்டிருந்தார்கள்.  அவை உங்கள் பார்வைக்காக இங்கே.

முதலில் விநாயகரைத் துதித்து ஆரம்பிப்போம். பக்கத்துல சங்குக் கோலம்.செட்டிநாட்டுல சங்கு ஊதித்தான் நல்லது எதையும் தொடங்குறது வழக்கம். !

புதன், 10 ஏப்ரல், 2019

குன்றக்குடியில் கார்த்திகை முதல் சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்

குன்றக்குடியில் கார்த்திகை முதல் சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்

குன்றக்குடியில் கார்த்திகை முதல். சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்.:-
*********************************************************
இந்தத் திருத்தலத்தில் இன்னொரு பெருமையும் உண்டு. எல்லா வைபவ விஷேஷங்களும் போக கார்த்திகை மாத முதல் சோமவாரம்தான் அது. அதை கொண்டாட நகரத்தார் பெருமக்கள் அனைவரும் இங்கே ஒன்று கூடிவிடுவார்கள்.

சைவ நெறிச் செல்வர்களான அவர்கள் அந்தக் காலத்தில் ”ஆண்டிக்கு வடித்தல் ” என கார்த்திகை முதல் சோம வாரத்தில் வண்டி கட்டிக் கொண்டு இங்கே  சமையல் பொருட்களை எடுத்து வந்து  ஆள் வைத்து சமைத்து  7 கறி, கெட்டிக் குழம்பு, சாம்பார், ரசம், வடை, பாயாசம் , அப்பளத்தோடு சம்பாவை முருகனுக்குப் படைத்து முதலில் குன்றக்குடியில் கோயிலிலே வசிக்கும் ஆண்டிகளுக்கு உணவிட்டு பின் தங்கள்  உறவினர்கள் ஊரார் ஆகியோருக்கும் உணவிடுவர்.ஊரோடு வந்தவர் அனைவருக்கும் சாப்பாடு உண்டு.

திங்கள், 8 ஏப்ரல், 2019

குன்றக்குடி குடைவரைக் கோவிலில் புடைப்புச் சிற்பங்களும் நிவந்தக் கல்வெட்டும்.

குன்றக்குடி குடைவரைக் கோவிலில் புடைப்புச் சிற்பங்களும் நிவந்தக் கல்வெட்டும்.

 குன்றக்குடி பற்றி நிறைய எழுதியாகி விட்டது.புகைப்படங்களும் பகிர்ந்திருக்கிறேன். இந்தக் குடைவரைக் கோயில் தொல்லியல்துறையின் பாதுகாப்பில் இருப்பதால் எடுத்த சில புகைப்படங்களையும் கம்ப்யூட்டரில் நீக்கி விட்டேன். கைவசம் இருந்த சிலவற்றைப் போட்டிருக்கிறேன்.

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மரபுடைய குன்றக்குடி மலையில் பிராமி கல்வெட்டுக்களும், குடைவரைக் கோயில்களும், சமணர் படுகைகளும் உள்ளன. 



சமணர் படுகையும் பிராமி கல்வெட்டுக்களும் இன்னொரு நாள்.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.

குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.

குன்றக்குடியைப் பற்றி நிறைய போஸ்ட் போட்டிருக்கின்றேன்.  இன்னும் இரு பதிவுகள் போடக்கூட மேட்டர் இருக்கு. முக்கியமாக சமணர் படுகைகள்.  அதை இன்னொரு இடுகையில் பார்க்கலாம். இப்ப மலையடிவாரத்திலிருந்து கோவில் வரை பார்ப்போம்.

குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும் (குமுதம் பக்தி ஸ்பெஷலில்) 

குன்றக்குடியில் கார்த்திகை முதல் சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்

குன்றக்குடியின் சுப்புலெட்சுமி .


கோவிலின் கிழக்குப் பார்த்த முகப்பு. பரத் சரண்யா நடித்த ஒரு படத்தின் காட்சி இங்கே எடுக்கப்பட்டிருக்கு.

வியாழன், 4 ஏப்ரல், 2019

குன்றக்குடியின் சுப்புலெட்சுமி .

குன்றக்குடியின் சுப்புலெட்சுமி .

பள்ளி முழுப்பரிட்சை விடுமுறை தினங்களில் காரைக்குடி வரும்போது குன்றக்குடிக்குப் பாதயாத்திரையாக அத்தைமக்கள் அம்மான் மக்களுடன் சென்றதுண்டு. அங்கே ஆயா வீட்டுக்கு வேதபாடசாலை ஒன்று உண்டு. கிழக்கில் இருக்கும் - கீழ வேதபாட சாலை. அதில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் குடும்பத்தார் வசித்து வந்தார்கள். மேலூரில் பாடசாலை போஷணைக்காக பாட்டய்யா நிலம் எழுதி வைத்திருக்கின்றார்கள். அதிலிருந்து வரும் குத்தகைப் பணம் இதை நடத்த உதவியது.

இப்போது பாடசாலையைப் புதுப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை குன்றக்குடி ஷண்முகநாதனைத் தரிசிக்கச் செல்லும்போதும் இங்கே போய் தங்கி எதிர்த்தாற்போலிருக்கும் பிரம்மாண்ட விநாயகரையும் மயிலாடும் பாறை வேலையும் தரிசித்து மலை ஏறுவது வழக்கம்.

மிக லேசான உயரமுள்ள தன்மையான படிகள். 200 படிகள் இருக்கலாம்.நல்ல அகலமான படிகள். கீழே சுப்ரமண்யர் சன்னதியும் அதன் பின்புறம்  பொய்கையும் உண்டு. அதன் பக்கவாட்டில்தான் சுப்புலெட்சுமி ( சுப்ரமண்யரின் கோயில் யானை ) தங்குமிடம். மிக அழகாக அவள் காதை அசைத்தபடி கம்பீரமாகக் காட்சி தருவாள். எப்போது சென்றாலும் அவளைச் சுற்றி இரு நிமிடங்கள் நின்று ரசிப்பதுண்டு.

குன்றக்குடியில் ஒரு குடைவரைக் கோயில் (குமுதம் பக்தி ஸ்பெஷலில்)

குன்றக்குடியில் ஒரு குடைவரைக் கோயில் (குமுதம் பக்தி ஸ்பெஷலில்)

”குன்றக்குடியின் குடைவரைக்கோயிலும் சமணர் படுகைகளும்” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :) 

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

பூசைச் சாப்பாடு.

பூசைச் சாப்பாடு.

கார்த்திகை மாத பூசையின்போது மதிய உணவு வெகு சிறப்பாக இருக்கும். இறைவனுக்குப் படைத்தது என்பதால் அதன் சுவையே அலாதி. வாங்க ஆவுடையான் செட்டியார் வீட்டில் நடந்த பூசையில் கலந்து கொண்டு பூசைச் சோறு உண்டு வருவோம்.


முருகனே பழனியில் ஆண்டிப் பண்டாரமாய் நின்றவன் என்பதால் பண்டாரம் வந்துதான் பூசை செய்து முதல் இலையில் அமர்ந்து உண்பார்.அதன்பின்னரே வீட்டாரும் ஊராரும் உண்பார்கள்.

திங்கள், 1 ஏப்ரல், 2019

கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

கார்த்திகை பூசையன்று முருகனுக்கு மாவிளக்கு வைப்பது காரைக்குடி மக்களின் பழக்கம். மாவிளக்கு மகாத்மியத்தைச் சொல்ல ஆரம்பித்தால் நீண்டுகொண்டே போகும்.

மகர்நோன்பு, திருவிழா காலங்களில், கார்த்திகை சோம வாரங்களில் , அம்மன் கோவில்களில்,  சாமி எழுந்தருளப் பண்ணும்போது,  மாவிளக்கு வைப்பது இங்கே வழக்கம். இதற்கெனவே எல்லார் வீட்டிலும் மாவிளக்குச் சட்டி என்றொரு பாத்திரம் இருக்கும். மாலையில் மாவிளக்கு வைத்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் திரியும் நெய்யும் பட்டு முருகிய அந்த மாவிளக்குத் துண்டைத் தேங்காய்ச் சில்லோடு உண்ணப் போட்டி நடக்கும்.



நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.