காரைக்குடி வள்ளலார் திருக்கோயில்.
காரைக்குடியில் நாகநாதபுரம் என்கின்ற நாவன்னா புதூரில் பெருமாள் கோவிலுக்கு எதிரில் ( துபாய் நகரத்தார் சங்கத்துக்கும் பக்கவாட்டில் ) புஷ்கரணியின் கிழக்குப் பக்கம் தேர்முட்டியின் அருகில் அமைந்துள்ளது வள்ளலார் திருக்கோயில்.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி
என்று ஜோதியையே ஈசனாக வழிபட்ட வள்ளலார் கோயிலை நெய்வேலி அருகிலுள்ள வடலூரில் கண்டதுண்டு. தைப்பூசத்தன்று சென்று தரிசிக்க வாய்த்ததில்லை. ஆறு திரைகள் விலக்கி ஜோதியாய் இருக்கும் ஈசனைத் தீப தரிசனத்தில் தரிசிக்கலாம் என்றார்கள். நாம் ஆறு திரைக்குமுன் இருந்த தீபத்தையே ஈசனாக வணங்கி வந்தோம்.
காரைக்குடி செஞ்சை பெருமாள் கோவில் எதிரில் இருக்கும் இந்த வள்ளலார் ஆலயத்தைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது ஒருமுறை.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி
என்று ஜோதியையே ஈசனாக வழிபட்ட வள்ளலார் கோயிலை நெய்வேலி அருகிலுள்ள வடலூரில் கண்டதுண்டு. தைப்பூசத்தன்று சென்று தரிசிக்க வாய்த்ததில்லை. ஆறு திரைகள் விலக்கி ஜோதியாய் இருக்கும் ஈசனைத் தீப தரிசனத்தில் தரிசிக்கலாம் என்றார்கள். நாம் ஆறு திரைக்குமுன் இருந்த தீபத்தையே ஈசனாக வணங்கி வந்தோம்.
காரைக்குடி செஞ்சை பெருமாள் கோவில் எதிரில் இருக்கும் இந்த வள்ளலார் ஆலயத்தைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது ஒருமுறை.
