எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நவக்ரஹ கோயில் தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவக்ரஹ கோயில் தரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஜூலை, 2020

நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான்

நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான்

திங்களூர் கும்பகோணத்தில் இருந்து 33 கிமீ தூரத்தில் உள்ளது. மூலவர் கைலாசநாதர். இறைவி பெரியநாயகி, நாவுக்கரசராலும் சுந்தரராலும் பாடல் பெற்ற தலம்.அப்பூதி அடிகளின் மகனைப் பாம்பு தீண்ட திருநாவுக்கரசர் இறைவனிடம் இறைஞ்சித் திருப்பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்த தலம்.

மிகச்சிறிய அழகான கோயில். இக்கோயில் கிழக்குமுகமாக பெரியநாயகி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது.. தெற்கு நோக்கிய சந்நிதியில் கைலாசநாதர் எழுந்தருளி உள்ளார். அவருக்கு எதிரில் எல்லாக் கோயில்களிலும் சந்திரன் சூரியன் இருக்கும் இடங்களில் அவர்கள் முறையே  எழுந்திருக்கிறார்கள். கோஷ்ட தெய்வமாக சிவனுக்கு எதிரில் வாயிற்புறத்தில் இடப்புற சந்நிதியில் எழுந்திருக்கும் சந்திரனே இத்தலத்தில் சந்திர பகவானாக வணங்கப்படுகிறார். 

செவ்வாய், 30 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.

நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர், கோயிலில் ஒரு நாள் அதிகாலை  நேரத்தில் சனீஸ்வரருக்கு அபிஷேகம் காணும் பாக்கியம் கிட்டியது. பொதுவாக கூட்டமான நேரத்தில் முண்டியடித்துச்  சென்று வணங்கியே  பழக்கம். அன்று ஏனோ நாலைந்து பேர் நிற்க நாமும் முன்னே சென்று நன்கு தரிசிக்கும் வாய்ப்புக்கு கிட்டியதில் மிக மகழ்ச்சியாக இருந்தது. எல்லா அபிஷேகமும் முடிந்து  வெள்ளிக்கவசத்தில் ஜொலித்தார் அழகியகுட்டிசனீஸ்வரர்.
சனி, ராகு, கேது ஆகியோரின் பெயர்ச்சி எல்லாவற்றையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஜென்ம சனி என்றாலே எல்லாரும் கிடுகிடுத்துப் போவார்கள். என்னென்ன சோதனை எல்லாம் வைச்சிருக்கோ சனி பகவான் என்று.

ஞாயிறு, 28 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

சூரியனின் பொன்னிறக் கதிர்கள் எங்கெங்கும் பிரகாசமாகப் பரவி இருக்க மந்தகாசமான அந்த அதிகாலை வேளையில் சூரியனார் கோவிலுக்குள் நுழைந்தோம். ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக் கின்ற தாய்போல கதகதப்பாக எம்மைச் சூழ்ந்திருந்தார் சூரியனார்.
நவக்ரஹங்களில் முதன்மையானவர். நவக்ரஹங்களின் நாயகன். பயிர்பச்சைகள் உயிர்த்தெழக் காரணமானவர். இந்த உலகத்தைத் தன் கிரணங்களால் தினம் புதிப்பிப்பவர். ஏழுகுதிரைகள் பூட்டிய இரதத்தில் வலம் வருபவர். அதிகாரம் தலைமைப்பண்புக்குக் காரணமானவர். ஆளுமைத்தன்மை மிக்கவர். சூரியனிலிருந்து வெடித்துச் சிதறியதுதான் பூமி ( பிக்பாங் தியரி ) என்பது அறிவியல் கூற்று.

வெள்ளி, 26 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி.

நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி.

அதிகாலை வெய்யில் சுகமாய் வருட கிழக்கு நோக்கிய ஐந்துநிலை இராஜகோபுரம் நம்மைக் கம்பீரமாக வரவேற்கிறது.  பணங்காசு அதிகம் பெற்றவரைப் பார்த்து அவருக்கென்ன "சுக்ர திசை அடிச்சிருக்கு" என்று சொல்வார்கள். சுக்ரதிசை நடந்தால் தொட்டதெல்லாம் பொன்னாகும். அப்படிப்பட்ட பொன்னார்மேனியன் சுக்கிரனை வணங்கும் வாய்ப்புக்கு கிட்டியது. 
ரோஸ் அரளி மாலையுடன் சுக்கிரனைப் பார்க்க நடையை எட்டிப் போட்டோம்.

புதன், 24 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

ஞானகாரகன் கேது என்று சொல்லப்படுவதுண்டு. கால சர்ப்ப தோஷ ஜாதகம் என்றோ காலசர்ப்ப  யோக ஜாதகம் என்றோ  ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவோ கேதுவோ இடம்பெற்று  அதிலிருந்து ஏழாம் எட்டாம் இடத்திற்குள் மற்ற கிரகங்கள்  இடம்பெற்றிருந்தால் இவ்வாறு அழைப்பார்கள்.

சகட யோகக்காரர்கள் என்றும் சொல்வதுண்டு. சகடம் ( கிணற்றில் நீர் இறைக்கப் பயன்படும் கருவி போல் ) அவர்கள் வாழ்வு நிலை மேலேஏறிக் கீழிறங்கி திரும்ப மேலேறிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் கேதுவை வணங்கினால் நிலைமை சீராகும்.
கீழப்பெரும்பள்ளம் நவக்ரஹக் கோயில்களில் சிறிய அழகிய கோயில். வெளிநிலையில் ரிஷபாரூடர் காட்சி அளிக்க எதிரே ஒரு ஆலமரம் நாகர்களால் நிரம்பி இருக்கிறது. நாகர்கள் மேலெல்லாம் பக்தர்கள் திருமணத் தடை நீக்க அணிவித்த மஞ்சள் கயிறுகள், மஞ்சள்  கிழங்குகளோடு மூடி இருக்கின்றன. குழந்தைப்பேறு வேண்டி கட்டப்பட்ட மஞ்சள் தொட்டில்கள் காற்றில் சரசரக்கின்றன. இது நாகதோஷ பரிகார ஸ்தலம்.

திங்கள், 22 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்

நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்


கும்பகோணத்தில் இருந்து திருவெண்காடு 52 கிமீ தூரத்தில் உள்ளது. காலை வேளையில் சென்று ஈசனுக்கும் அம்பிகைக்கும் திருவனந்தல் பார்த்தோம்.
இக்கோயில் சோழர் காலத்தில் கட்டிடப்பட்டது. கிபி 1000 இல் இருந்து தற்போது வரை அழகாகப் புதுப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

யூ ட்யூபில் 1931 - 1940 வீடியோக்கள். கோலங்கள்.

யூ ட்யூபில் 1931 - 1940 வீடியோக்கள். கோலங்கள். 1931.கோலங்கள் - 261 l கிராமதெய்வம்  l தேனம்மைலெக்ஷ்மணன் https://www.youtube.com/watch?v=7fdL1...