இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.
இரணியூரில் வளர்பிறை அஷ்டமி விசேஷம். தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்ததுபோல் வளர்பிறை அஷ்டமி குபேரனுக்கு உகந்தது என்கிறார்கள். ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியை குபேரன் வணங்கி அருள் பெற்ற ஸ்தலம் என்பதால் விசேஷம். நாமும் அவரை வணங்கினால் அருளும் பொருளும் வழங்கி செழிப்படைய வைப்பார் என்பது நம்பிக்கை
இந்த ஹோமம் ஓவ்வொரு மாதமும் வளர்பிறை அஷ்டமியில் அங்கே இருக்கும் யாக/ஹோம மண்டபத்தில் நிகழ்கிறது. முன்பே இதற்குப் பதிவு செய்திருக்கிறார்கள். எங்கள் உறவினரின் அழைப்பின்பேரில் சென்றிருந்தோம்.
இந்த ஹோமம் ஓவ்வொரு மாதமும் வளர்பிறை அஷ்டமியில் அங்கே இருக்கும் யாக/ஹோம மண்டபத்தில் நிகழ்கிறது. முன்பே இதற்குப் பதிவு செய்திருக்கிறார்கள். எங்கள் உறவினரின் அழைப்பின்பேரில் சென்றிருந்தோம்.
