எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2020

இரணியூர்க் காளி

இரணியூர்க் காளி

காரைக்குடி அருகில் உள்ளது இரணியூர். இது நகரத்தாரின் ஒன்பது கோவில்களில் ஒன்று. இக்கோவில் விமானத்தைத் தரிசித்தாலே இறைவனைத் தரிசித்ததற்குச் சமம். இன்னும் வக்கிர அமைப்பில் அமைந்த தெய்வச் சிலைகள், குபேரன், ஹிரண்யவதம், அரியும் அரனும் ஒன்றென உணர்த்தும் சம்பவங்கள், ஹிரண்யகசிபுவை அழித்தபின் ஆக்ரோஷமாய் அலைந்த நரசிம்மத்தை ஆற்றுப்படுத்தி ஆட்கொண்ட சிவன், அதனால் ஆட்கொண்டநாதர் & நரசிம்மேஸ்வரர் என்று பெயர் பெற்ற மூலவர் இன்னும் பல சிறப்புகள் உண்டு இரணியூருக்கு.

நரசிம்மரின் கோபம் கண்டு தங்கையான உமையும் உக்கிரமடைந்து அதன் பின் நவதுர்க்கைகளாக உள்மண்டபத்திலும் அஷ்டலெக்ஷ்மிகளாக வெளி மண்டபத்திலும் இரணியூர் ஆட்கொண்ட நாதர் கோவிலில் காட்சி தருகிறார்கள். தமிழரின் தொன்மையான சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு இக்கோயில்.

இத்தோடு கோபம் கொண்ட காளி, நரசிம்மர் ( நீலமேகப் பெருமாள் ) ஆகியோரை ஆற்றுப்படுத்தியபின் அவர்களுக்கும் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரணியூர்க் கோவில் பற்றியும் நீலமேகப் பெருமாள் பற்றியும் முன்பே பல்வேறு இடுகைகளில் குறிப்பிட்டுள்ளேன்.

இது இரணிக்காளி கோவில் பற்றியது. இக்கோவில் இரணியூர் ஆட்கொண்ட நாதர் கோவிலில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. தனியான ஆரண்யம்போன்ற இடத்தில் வாய்க்கால்கள் சூழ உள்ள இடத்தில் ஏகாந்தமாகக் கோவில் கொண்டிருக்கிறாள் இரணிக் காளி.

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

விஜயதசமியில் தஞ்சைப் பெரியகோவில்.

விஜயதசமியில் தஞ்சைப் பெரியகோவில்.

ஜகதிப்படை கல்வெட்டு, மெய்கீர்த்தி, பாந்து என சகோ கரந்தை ஜெயக்குமாரின்  “ ஜகதிப்படை “ இடுகையில் படித்தவுடன்  சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சை ப்ரகதீஸ்வரர் கோயிலுக்கு விஜயதசமியன்று சென்றதும் இரவில் புகைப்படங்கள் எடுத்ததும் ஞாபகம் வந்தது.

இராஜ ராஜ சோழன் பற்றிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. சினிமாவில் சிவாஜியையே ராஜ ராஜ சோழனாகக் கண்டிருக்கிறோம். ( படம் பார்த்ததில்லை என்றாலும் பாடல்கள் சில பார்த்திருக்கிறேன். ) இப்படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் இதற்கான ரசிகர்கள் அநேகம் பேரை அறிவேன். இனிமையாய் இருக்கும் எதையும் விரும்புவதுதானே மனித இயல்பு.

அந்த வருடம் ராஜ ராஜ சோழனின் 1027 ஆம் ஆண்டு சதயத் திருவிழா வேறு கொண்டாடப் பட்டுக் கொண்டிருந்தது. கோயில் தொல்லியல்துறையின் பராமரிப்பில் இருப்பதால் அதன் சாந்நித்தியம் எல்லாம் சிறுவயதில் உணர்ந்ததோடு போய்விட்டது. இதுவும் தாராசுரம் கோயில் எல்லாம் சுத்தமாக இருக்கின்றன ஆனால் நமக்கு பூக்கள், கற்பூரம், நெய்தீபம், அபிஷேக திரவியங்கள், அர்ச்சனைப் பொருட்கள் அதன் பழமைத்துவம் என்று ஏதோ வாசனை மிஸ்ஸிங். அதனால்  கோயிலுடன் கூடிய அந்தப் பழைய ஆத்மார்த்தம் போய்விட்டது. கோயில் என்பதும் ஒரு உள்ளுறை உணர்வு.

அங்கே விஜயதசமியின் போது எடுத்த சில படங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.

{கோவில்களிலும் ரயில்வே & பஸ் நிலையங்களிலும் ஒரு பயம் தரும் விஷயம் என்னன்னா அங்கங்கே பைரவர்கள் சுதந்திரமாக உலாவி நம்மைப் பயப்படுத்துகிறார்கள். அவ்வப்போது உரக்க திடீரென்று குரைத்துத் தள்ளுகிறார்கள்.குறுக்கும் மறுக்கும் ஓடுகிறார்கள். இதற்கு அறநிலையத்துறை ,தொல்பொருள் துறை , ரயில்வே  நிர்வாகம் எல்லாம் ஏதாவது செய்தால் தேவலாம். }

கோயில் பற்றிய பல்வேறு தகவல்கள் விக்கிபீடியாவில் கொட்டிக் கிடக்கின்றன. இது சதுரவடிவில் அமைக்கப்பட்ட கருவறைக் கோபுரம்

வெள்ளி, 25 டிசம்பர், 2020

திருக்கடையூரில் அம்மா அப்பாவின் விஜயரத சாந்தி - 2.

திருக்கடையூரில் அம்மா அப்பாவின் விஜயரத சாந்தி - 2.

ஹோமம் முடிந்து இந்தக் கும்பங்களை பிரதட்சணமாக பிரகாரங்களில் எடுத்து வரவேண்டும்.  சிவன் சந்நிதியின் பின்புறம் கிழக்குப் பக்கமாக இந்த கும்பம் சொரிதல்/அபிஷேகம் நடைபெறுகிறது.

முதலில் ஹோமம் செய்வித்த வேதியர் கும்பம் சொரிதல். இவர் அபிஷேகித்ததும் மற்றையோரும், பெண் மக்கள், பிள்ளை பெண்டுகளும் , கடைசியாகப் பெற்றோருக்குத் தலைமகனும் மருமகளும் தம்பதி சமேதராகக் கும்பம்சொரிய வேண்டும்.

இந்த சல்லடை போன்ற அமைப்பு நீரை சீராக வடியச் செய்ய உபயோகப்படுகிறது.

புதன், 23 டிசம்பர், 2020

திருக்கடையூரில் அப்பா அம்மாவின் விஜயரத சாந்தி - 1 .

திருக்கடையூரில் அப்பா அம்மாவின் விஜயரத சாந்தி - 1 .

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி சந்நிதியில் நித்தமும் ஆயுஷ்ஹோமங்கள், ம்ருத்யுஞ்செய ஹோமங்கள், உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம் என ஒரே கோலாகலம்தான். கனகாபிஷேகம் , மகுடாபிஷேகம் ஆகியனவும் இருக்கலாம் தெரியவில்லை.

கோவிலின் பிரகாரமெங்கும் பிறந்த நட்சத்திரம் கொண்டாடும் தம்பதிகள்.

மார்க்கண்டேயனின் பதினாறாம் வயதின்போது அவருக்கு ஆயுள் முடிந்துபோக எமன் கவர்ந்து செல்ல வருகிறார். அப்போது மார்க்கண்டேயர் சிவனுக்கு பூஜை செய்து சிவலிங்கத்தை வாரியணைக்க அதிலிருந்து சிவன் தோன்றி எமனை எட்டி உதைத்து மார்க்கண்டேயரை சிரஞ்சீவி ஆக்கினார் என்பது ஸ்தல வரலாறு.  இவர் கால சம்ஹார மூர்த்தியாகவும் எழுந்தருளி இருக்கிறார். இதனால் இங்கே இந்த ஹோமங்கள் , சாந்திகள் செய்வது சிறப்பு.

அமிர்தமே லிங்கமாக அமைந்ததால் இங்கு இருக்கும் மூலவர் அமிர்த கடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர். அம்மை அபிராமி. அம்மனின் எழிலில் மூழ்கியிருந்த அபிராமி பட்டர் அமாவாசையை பௌர்ணமி என்று அரசனிடம்  கூறிவிட்டார். அதனால் அபிராமியை அந்தாதியால் பாட அவள் தன் தாடங்கத்தை எறிந்து அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருத்தலம். இன்னும் பல்வேறு சிறப்புக்களும் உண்டு.

இங்கே சென்ற ஆண்டு அம்மா அப்பாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா நடந்தது. நான், அப்பா, அம்மா மூவர் மட்டுமே சென்றுவந்தோம். அந்நிகழ்வின் தொகுப்பாக இப்புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

இங்கே நவக்ரஹ சந்நிதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ஸ்தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் அமிர்த புஷ்கரணி, கால தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், மூவர் தேவாரம் பாடிய திருத்தலம்.  ( மாணிக்கவாசகர் பாடவில்லை ).

கோவில் வாசலில் வேதியர் கூறியபடி  முதலில் மாலை மாற்றிக் கொண்டார்கள் அப்பாவும் அம்மாவும்.


திங்கள், 21 டிசம்பர், 2020

இரணிக்கோயில் ஆக்ரோஷச் சிம்மங்களும் சிம்ம யாளியும். மை க்ளிக்ஸ். IRANIKKOIL , MY CLICKS.

இரணிக்கோயில் ஆக்ரோஷச் சிம்மங்களும் சிம்ம யாளியும். மை க்ளிக்ஸ். IRANIKKOIL , MY CLICKS.

நூற்றுக்கணக்கான ஆக்ரோஷச் சிம்மங்களை நீங்கள் இரணிக்கோயில் முழுவதும் தரிசிக்கலாம். பிரகாரத் தூண்கள் தோறும் எக்காளமிடும் சிம்மங்கள்.

ஒரு சிலவற்றில் ஒற்றையாகவும் ஒருசில தூண்களில் நாற்புறங்களிலும் கவினுற செதுக்கப்பட்டுள்ள இவற்றின் கோபமுகம் சிலசமயம் சாந்தமாகவும் சில சமயம் உக்கிரமாகவும் அச்சமூட்டுவதாகவும் உள்ளது.

வக்கிர அமைப்பில் அமைந்த கோவில் இரணிக்கோவில் இதுபற்றி முன்பே பல இடுகைகள் எழுதி  உள்ளேன். இப்போது தனியாக சிம்மங்கள் பற்றி.

ஏனெனில்  இரணியனை அழித்த உக்கிர நரசிம்மரை சரபேஸ்வரராக ஈஸ்வரன் சாந்தப்படுத்திய ஸ்தலம் இது. எனவே அசுரனை வதைத்த உக்கிர சிம்மங்கள் பொலிந்திருப்பதில் ஆச்சர்யமில்லை.


பூ மொட்டுக்களும் வாழைப்பூக்களும் மலர்ந்த தூண்களின் கீழ்ச்செறிவின் பீடத்தில் சிவகணங்களும் சிம்மமும் கூட காட்சி அளிக்கின்றன.

சனி, 19 டிசம்பர், 2020

சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோமதிஅம்மன் திருக்கோயில்

சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோமதிஅம்மன் திருக்கோயில்

சங்கரன் கோவிலுக்குக் செல்லும் பாக்கியம் கிட்டியது. அதோடு அதாக அது ஒரு ஆகஸ்ட் மாதம் என்பதால் ( ஆடிமாதம் - ஆடித் தபசு ) புஷ்பப் பாவாடை வேண்டுதல்களையும் தரிசிக்க முடிந்தது. இங்கே பிரகாரத்தில் உள்ள புற்று மண் விசேஷம். பதினோரு நிலை கொண்ட ராஜகோபுரம் கம்பீரம். சங்கரனும் நாராயணனும் இணைந்து சங்கர நாராயணராகக் காட்சி அளித்த தலம். அம்பாள் ஊசிமுனையில் ஈசனுக்காகத் தவமியற்றிய ஸ்தலம்.
இறைவன் சங்கரலிங்க ஸ்வாமி, இறைவி கோமதியம்மன். இருவருக்கும் தனித்தனிச் சந்நிதிகள், தனித்தனிப் பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மஹா மண்பபங்கள். பிரம்மாண்டம்.

வியாழன், 17 டிசம்பர், 2020

சித்திரசபையின் சித்திரக் கடவுள்.

சித்திரசபையின் சித்திரக் கடவுள்.

சிவன் நடனமாடிய ஐந்து சபைகளில் நான்கை நான் தரிசித்திருக்கிறேன்.

சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருவாலங்காடு ரத்தின சபை, திருக்குற்றாலம் சித்திர சபை ஆகியன. திருநெல்வேலி தாமிர சபையை எப்போது தரிசிக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை.

தென்காசிக்குச் சென்றபோது சித்திரசபையை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இக்கோயில் திருக்குற்றாலநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அருகிலேயே இன்னொரு குற்றாலநாதர் கோயிலும் இருக்கிறது.
இது தெப்பக்குளம்.

இது சிவன் மார்க்கண்டேயனை யமனிடம் இருந்து காத்த தலம். சிவகாமி அம்மையுடன் திருக்குற்றால நாதர் ஓவியமாகக் காட்சி அளிக்கிறார். இங்கே ஒரே ஒரு சந்நிதியும் பிரகாரமும்தான். அதைவிட அதிசயம் மூலவரிலிருந்து கோஷ்ட தெய்வங்கள் வரை எல்லாமே ஓவியங்கள்தான்.

வெள்ளி, 11 டிசம்பர், 2020

தென்காசி உலகம்மன் சமேத காசிவிசுவநாதர் திருக்கோயில்.

தென்காசி உலகம்மன் சமேத காசிவிசுவநாதர் திருக்கோயில்.

குற்றாலத்துக்குச் சென்றிருந்த போது தென்காசியில்தான் தங்கி இருந்தோம். அங்கே காசி விசுவநாதர் உலகம்மன் கோயிலுக்கு ஒரு நாள் காலையில் சென்றோம். ஒன்பது நிலை ராஜ கோபுரம். பதினாலாம் நூற்றாண்டில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்டதாம். அடேயப்பா என்ன பிரம்மாண்டம் பார்க்கப் பார்க்க வியப்பு. நிமிர்ந்து பார்த்தால் தலை சுளுக்கிக் கொள்ளும் அளவு உயரம். சிலைகளோ எண்ணற்றவை. கிட்டத்தட்ட 800 பொம்மைகள் கோபுரத்தில் உள்ளனவாம். !

இன்னொரு சிறப்பு இக்கோயில் ஒரு தேர்வடிவிலும் அதை இரு பெரும்  யானைகள் இழுத்துச் செல்லும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சிவனுக்கு அம்பாளுக்கு முருகனுக்கு என்று தனித்தனிக் கோயில்களே உள்ளே இருக்கின்றன. ப்ரகாரங்களும் பிரம்மாண்டமானவை.

தல வரலாறு :-

புதன், 9 டிசம்பர், 2020

காளிக்கூத்தும் இரண்ய மல்யுத்தமும் இரண்ய சம்ஹாரமும்.

காளிக்கூத்தும் இரண்ய மல்யுத்தமும் இரண்ய சம்ஹாரமும்.

தில்லைக்காளி, திருவாலங்காட்டுக் காளி, எல்லைக்காளி எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கே இரணிக் காளியை தரிசிப்போம் வாருங்கள். இரணியூரில் தனிக்கோயில் கொண்டுள்ள அவள் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோவிலில் சிற்பத் திருமூர்த்தமாக அருள் பாலிக்கிறாள்.

அவளின் எல்லையில்லாக் காளிக்கூத்து காலந்தோறும் இங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. கூத்தனுக்கு நிகரானவள் காளி. அதனால் அவள் இரணியூரில் நிகழ்த்தும் கூத்தும் அதி அற்புதமானது. அதை உணரவும் தரிசிக்கவும் இங்கே கட்டாயம் வாருங்கள்.
கடுகிச் செல்லும் வாயுபகவான். கிழக்குப் ப்ரகாரத்தின் சுற்றில் குபேரனிலிருந்து புகைப்படம் எடுத்துள்ளேன். எதிர்பாராத ஆச்சர்யங்கள் கிடைத்தன. அவை பின் தொடர்கின்றன.

செவ்வாய், 8 டிசம்பர், 2020

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம்.

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம்.

என் உறவினர் ஒருவர் இல்லத்துக்கு ஒரு நாள் மாலை சென்றிருந்தோம். அங்கே  அன்று லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்தார்கள்.வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த தோழியர் குழாமுடன் பாராயணம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. கோரஸாக மந்திரம் சொல்லும்போது கேட்கும் ஒலி இனிமையானது. அவ்வப்போது வீட்டில் படித்திருக்கிறேன் என்றாலும் சமஸ்கிருதம் என்பதால் ஓரிரு இடங்களில் உச்சரிப்பில்  பிழை வந்துவிடக் கூடாதே என்று மெதுவாக வாசித்தேன். 

சனி, 5 டிசம்பர், 2020

இரணிக்கோவில் தூண் சிற்பங்கள். - திராட்சையும் நரியும் பூச்சாடிகளும்.

இரணிக்கோவில் தூண் சிற்பங்கள். - திராட்சையும் நரியும் பூச்சாடிகளும்.

சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற இரணியூர் ஆட்கொண்ட நாதர் சிவபுரந்தேவி திருக்கோவிலில் தூண் சிற்பங்களைத் தனியாகப் பதிவிட்டுள்ளேன்.

இது பற்றி முன்பே பல இடுகைகள் வெளியிட்டுள்ளேன். அவை கீழே அணிவகுக்கின்றன.

இக்கோவிலில் அஷ்டலெக்ஷ்மிகள் வெளியேயும் நவதுர்க்கைகள் உள்ளேயும் உள்ள வக்ர அமைப்பில் அமைந்துள்ளன. ஆட்கொண்டநாதரே நரசிம்மேஸ்வரராகவும்,  உக்கிரம் கொண்ட இரணியூர்க் காளியும் காளிக்கூத்தும், இரண்ய மல்யுத்தம், இரண்ய வதமும் நிகழ்ந்தது.   இன்னும் பல்வேறு சிறப்பும் கொண்டது இக்கோயில்.

அஷ்டலெக்ஷ்மி மண்டபத்தில் விநாயகர் முருகன் குழந்தைக்குப் பாலூட்டும் பெண் , யானை வாகனத்தில் இந்திரன், சித்திரக் குள்ளன், சூரியன், யாளிகள், தேவ பூத கணங்கள் , சிம்மங்கள் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

பூச்சாடி !

வியாழன், 3 டிசம்பர், 2020

திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஸ்ரீயோகபைரவர் திருக்கோவில்.

திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஸ்ரீயோகபைரவர் திருக்கோவில்.

காரைக்குடியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பத்தூர். அங்கே திருத்தளிநாதர் கோவிலுக்குச் சென்றோம் ஒரு ஞாயிறு காலையில் .மிக தேஜஸோடு ஜொலித்த அக்கோயிலைப்பற்றிய புகைப்படங்களும் விபரங்களும் பகிர்ந்துள்ளேன்.

ஈசன்  திருத்தளிநாதர் . அம்பாள் சிவகாமி அம்மை. யோக பைரவர் எனப்படும் ஆதி பைரவர் வழிபாடு இங்கே விசேஷம். இறைவனை மகாலெக்ஷ்மி வணங்கியதால் திருத்தளி நாதர் எனப்படுகிறார். வால்மீகி இங்கே தவமிருந்து அவரை புற்று மூடியதால் இந்த ஊர் திருப் புத்தூர் எனலாயிற்று. மேலும் ஈசன் கௌரிதாண்டவம் ஆடிய திருத்தலம்.

அப்பனுக்கும் அம்மைக்கும் ஸ்கந்தருக்கும் பைரவருக்கும் வன்னிமர விநாயகருக்கும், திருநாகேஸ்வரருக்கும் தனித்தனிச் சந்நிதிகள்.  ஸ்தலவிருட்சம் கொன்றை, தீர்த்தம் ஸ்ரீ தளி தீர்த்தம். அகத்தியர் வணங்கிய அகத்திய லிங்கம் இருப்பதும் சிறப்பு
வெளியே பார்க்க சிறியதாகத் தெரிந்தாலும் உள்ளே முன் மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியன கொண்ட பெருங்கோவில் இது.

செவ்வாய், 1 டிசம்பர், 2020

ஷண்முகநாதபுரத்தின் ( ஆராவயல் ) மூன்று கோயில்கள்.

ஷண்முகநாதபுரத்தின் ( ஆராவயல் ) மூன்று கோயில்கள்.

ஆராவயல் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர், வீரமாகாளி அம்மன், ஷண்முக விநாயகர்  இம்மூன்று கோயில்களும் அக்கம் பக்கமாக அமைந்துள்ளன. அது மட்டுமல்ல இந்த வீரமாகாளி அம்மன் கோவிலில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது என்னவென்று பின்னர் சொல்லி இருக்கிறேன்.

சமீபத்தில்தான் அதாவது 1. 7. 2018 அன்று  ஆறாவயலில் இம்மூன்று கோவில்களுக்கும் ஒருங்கே கும்பாபிஷேகம் நடந்தன. எங்கள் பாட்டி ஆயா வீடு உள்ள ஊர் ( மஞ்சி வீடு ) என்பதால் எனக்கு ஆறாவயல் மிகப் பிடித்தமான ஊர்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் இக்கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நிகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் மாப்பிள்ளை அழைப்பு இங்கே இருந்துதான் நடைபெறும்.

ஆறாவயலில் திருவிழா சமயத்தில் நடைபெறும் கூத்தைப் பார்க்கப் பெரும்கூட்டம் கூடும். சின்னப் பிள்ளையில் அங்கே ஓரிரு சமயம் சென்று கூத்துக்களைப் பார்த்திருக்கிறோம். ஆரம்பிக்க வெகு நேரம் ஆகிவிடும் என்பதால் ( பாய் எல்லாம் கொண்டு சென்று அமர்ந்து கொண்டு பார்ப்பார்கள் ) உறங்கி விட்டதும் உண்டு.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.