காரைக்குடியில் ஸ்கந்தர்சஷ்டி விழாவும் திருப்புகழ் பாராயணமும்.
கடந்த ஆறு நாட்களாக காரைக்குடி நகரச் சிவன் கோயிலில் ஸ்கந்தர்சஷ்டி விழா நடைபெற்றது. முதல் நாள் திருமதி பாலாம்பாள் ஆச்சி அவர்கள் ஸ்கந்தபுராணம் படித்தார்கள்.
அதன் பின் காரைக்குடி திருவாசகம் முற்றோதல் குழுவின் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. இவர்களைத் திருக்கோயில் நிர்வாகத்தினர் மரியாதை செய்து சிறப்பித்தார்கள்.


