எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 மார்ச், 2019

மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

மாத்தூர் பெரியநாயகி சமேத ஐநூற்றீசுவரர் கோவிலில் வருடந்தோறும் மாசி மாதம் பிரமோற்சவம் நடைபெறும். அப்போது சுவாமிகளை ஊர்வலமாக எழுந்தருளப் பண்ணுவார்கள். மாத்தூர்க் கோவிலில் புள்ளிகள் அதிகம் என்பதால் அந்தப் பத்து நாட்களுக்குள் இரண்டு ஊர்க்காரர்கள் சேர்ந்து மண்டகப்படி செய்வது வழக்கம்.

கானாடுகாத்தான் பங்காளிகள் ( எங்கள் ) மண்டகப்படி அன்று ஒருமுறை நானும் சென்று கலந்துகொண்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனம். ரிஷபம், காமதேனு, யானை, சிங்கம், மயில் என்று விதம் விதமாய் உலா இருக்கும்.


நாங்கள் சென்ற அன்று ரத ஊர்வலம்.

வியாழன், 28 மார்ச், 2019

மாத்தூர் - சில சிறப்புகள்.

மாத்தூர் - சில சிறப்புகள்.

கொங்கணச்சித்தர் தாமிரத்தைத் தங்கமாக்கி ஐநூறு மாற்றுத்தங்கம் உருவாக்கிய இடம், அவரை ஐநூற்றீசுவரர் ஆட்கொண்ட கோவில், நட்சத்திர விருட்சங்கள் நிரம்பிய கோவில், இயற்கை சாளரமுறையில் கருவறை வரை அமைக்கப்பட்ட கோவில், திருவோடு மரமும் வில்வமரமும் இருக்கும் கோவில், மாப்பிள்ளை நந்தி எனப்படும் சிம்ம நந்தி ( கல்யாண நந்தி அருள் பாலிக்குமிடம்) , ஆயுள் வழங்கும் ஆனந்த முனீஸ்வரரும், ஐநூற்றீசுவரரும் அருளாட்சி செய்யுமிடம், இரட்டை பைரவர்களுடன் காலபைரவர் காட்சி தரும் ஸ்தலம் ,பல நூற்றாண்டுகள் தாண்டியும் காட்சி தரும் ஸ்தல விருட்சமான மகிழ மரம், சிம்ம யாளிகள், நகர விடுதி, பசுமடம் ஆகியன உள்ளன. பசு ஸ்தோத்திரம் எழுதப்பட்டிருப்பது இங்கே மட்டுமே.


எவ்வளவு பிரம்மாண்டமான கோயில் வாசல். இங்கே புள்ளிகள் அதிகம் என்பதால் வரவும் அதிகம். அதனால் மாத்தூர்க் கோயிலும் விடுதியும் ( இப்போது தங்கும் அறைகளும் உள்ளன )  எப்பவுமே அழகாகப் பராமரிக்கப்படும்.

புதன், 27 மார்ச், 2019

அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.

அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.

திராவிடக் கட்டிடக் கலையின் உயர்ந்த எடுத்துக்காட்டாய் காரைக்குடியில் அமைந்துள்ளது தமிழ்த்தாய் திருக்கோயில்.

உலகிலேயே தமிழ்த்தாய்க்குக் கோயில் கட்டப்பட்டுள்ள ஒரே இடம் காரைக்குடி மட்டும்தான். அஃகன்னா வடிவில் கேடயத்தின் எஃகைப்போல கம்பன், வள்ளுவன், இளங்கோ என்கின்ற முப்பெரும் புள்ளிகள் சூழ, தமிழ்த்தாய் வரித்தாய், ஒலித்தாய் என்னும் வாட்களுக்கு மத்தியில் வீரத்தாயாய்க் குடிகொண்டிருக்கிறாள்.

இக்கோவில் காரைக்குடி கம்பன் கற்பகம் பள்ளியின் உள்ளே கம்பன் கழகத்தாரின் ( கம்பன் அடிசூடி திரு பழ பழனியப்பன் அவர்களின் )  பெருமுயற்சியால் கட்டப்பட்டது. இதற்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தவர் கலைஞர் டாக்டர் மு கருணாநிதி அவர்கள். இது முழுமையாய்க் கட்டிமுடிக்கப்பட்டபின் இதைத் திறந்து வைத்தவரும் அவரே.

தஞ்சைப் பெருவுடையார் கோவில் அமைப்பில் இருக்கிறது தமிழ்த்தாயின் கருவறைக் கோபுரம். அன்றலர்ந்த தாமரைபோல் மலர்ந்தும் இருக்கிறது.


கம்பன் மணிமண்டபத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ளது இக்கோவில்.

காரைக்குடி முனியையா கோயில்.

காரைக்குடி முனியையா கோயில்.

காரைக்குடியில் முனியையா கோயில் என்று இங்கே திருமணம் ஆன தம்பதியினர் மறுநாள் முதன் முதலில் இந்தக் கோயிலில் அபிஷேகம் ஆராதனை செய்துதான் வாழ்வைத் துவங்குவர்.

இது கிருஷ்ணன் கோவிலுக்குப் பின்புறமுள்ள சாலையில் அமைந்துள்ளது. தேவகோட்டையிலிருந்து பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்துக்கு இவ்வழியிலேயே செல்லும். 




சில ஆண்டுகளுக்கு முன் எனது ஆயாவுடன் ( அவர்களின் வேண்டுதலை நிறைவேற்ற ) அக்கோவிலுக்குச் சென்றிருந்தோம். எனக்குத் தெரிந்து காரைக்குடியில் கல்யாணக் கட்டளை கொடுத்து வழிபடும் காவல் தெய்வம் இவர் ஒருவரே. 

திங்கள், 25 மார்ச், 2019

பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.

பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.

மெய்யாத்தா படைப்பு வீட்டில்தான் கம்புகட்டி க்யூவில் மக்கள் சென்று பார்த்திருக்கிறேன். அதற்குப் பின் பள்ளத்தூர் அள. கா பொதுப்படைப்பு வீட்டில் மாநாடு அளவு கூட்டத்தைப் பார்த்து வியந்தேன்.

பள்ளத்தூர், பலவான்குடி, புதுவயல், , கடியாபட்டி, காரைக்குடி&தேவகோட்டை, கொத்தமங்கலம், கோட்டையூர் என்ற ஏழூரைச் சேர்ந்த இரணிக்கோவில் பங்காளிகள் 2 வருஷத்துக்கு ஒரு முறை பள்ளத்தூரில் அளகஞ்செட்டியார், காளியாத்தா பொதுப்படைப்பு படைக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் வந்து வணங்கலாம். 

அதற்கு 5000 பேர் அளவில் கலந்து கொள்கிறார்கள். படைப்பு வீடு நிறைந்து இருக்கிறது. அன்று மூன்று வேளையும் சாப்பாடு நடந்துகொண்டே இருக்கிறது. 

படைப்புப் பணியாரத்தை ( நெய்யில் ஊற்றப்படும் கருப்பட்டிப் பணியாரம் )நீண்ட வரிசையாக அமர்ந்து மகளிர் ஊற்றுகிறார்கள். பாற்சோறு போன்றவை அண்டாக்களில் சமைக்கப்படுகின்றன. 

திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

காரைக்குடி துபாய் நகர விடுதியில் திருப்புகழ் பாராயணமும் 961* உபதேசம் வழங்கலும் நடைபெற்றது.


காரைக்குடி செஞ்சை பெருமாள் கோவில் வடகிழக்கில் அமைந்துள்ளது துபாய் நகர விடுதி.

வெள்ளி, 22 மார்ச், 2019

கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .

கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .

891*கார்த்திகை மாதம் காரைக்குடிப் பகுதிகளில் *92* சோமவார விரதம் இருந்து வேல் பூசை செய்வார்கள். அப்போது முதலில் 893*வேலுக்கும் தண்டாயுதத்துக்கும் அபிஷேகம் நடைபெறும்.

நல்ல நேரத்தில் இந்த 894*இரு பீடங்களும் ஒன்றின்மேல் ஒன்றாகக்  கிழக்கு நோக்கி வைக்கப்பட்டு அதன் மீது தண்டமும் வேலும் வைக்கப்படும். இதை ஒருவர் வைத்துப் பிடித்துக் கொள்வார். வேல் வலது புறமும் தண்டம் இடது புறமும் வைக்கப்படும்.

அம்மா வீட்டில் கார்த்திகை வேல் பூசை வருடாவருடம் நடக்கும் அப்போது எடுத்த  அபிஷேகப் படங்களைப் பகிர்ந்துள்ளேன். முன்பு ஒவ்வொருவர் இல்லங்களிலும் நடைபெற்றது இப்போது அதற்கென கட்டப்பட்டுள்ள 895*பூசை வீட்டில் நடைபெறுகிறது.
896*அபிஷேகத் திரவியங்கள்.   பால், தயிர், எண்ணெய், ஸ்னானப் பொடி, சந்தனம், கிடாரங்காய் சாறு, சாத்துக்குடிச் சாறு, ஆரஞ்சுச் சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி என 897*பதினோறு அபிஷேகங்கள் நடைபெறும்.

வியாழன், 21 மார்ச், 2019

உலாவந்த காசி ஈசன்.

உலாவந்த காசி ஈசன்.

காசியிலிருந்து உலா வந்த 400 கிராம் ( 3 1/2 கிலோ தங்கத்திலாலான ) சொர்ணலிங்கேஸ்வரரைப் பற்றி முன்பே ஒரு இடுகை வெளியிட்டிருக்கிறேன். மானகிரிக்கு வந்திருந்தபோது அங்கே சென்று எடுத்த இன்னும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.

காசி நகர சத்திரத்தில் சொர்ணத்திலாலான விசாலாக்ஷி சமேதராய் 2011 இல் இருந்து காட்சி அளிக்கிறார் சொர்ணலிங்கேஸ்வரர்.

இங்கே சம்போ பூஜை பிரசித்தம். தீபாவளிஅன்று லட்டுத் திருவிழா காண கூட்டம் அலைமோதும். இங்கே இறந்தால் முக்தி என்பதால் இந்தச் சத்திரத்துக்குச் சென்று  (ஆன்மவிடுதலை அடைய எண்ணி)  முதியவயதினர் சிலர் பல்லாண்டுகளாகத் தங்குவதும் உண்டு.

பக்கத்திலேயே காசி விசுவநாதர் கோயிலும் தஸஸ்வமேத யாகக் கட்டமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

76 நகரத்தார் ஊர்களுக்கும் 9 நகரத்தார் கோயில்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

புதன், 20 மார்ச், 2019

மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.

மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.

நெல்லிமரத்துப் பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த 48 நாட்களுக்குள் ( ஒரு மண்டலத்துக்குள்  - மண்டகப்படிக்குக்  ) அபிஷேக ஆராதனைக்குக் கொடுத்திருந்தோம். அப்போது நவராத்திரி சமயமாதலால் கோயிலில் கொலு வைக்கப் பட்டிருந்தது. நவராத்திரியை இங்கே மகர்நோன்பு என்பார்கள்.

காரைக்குடியில் மகர்நோன்பு சிறப்பு. அதிலும் 4 சாமிகள் ஒரு சேர மகர்நோன்புப் பொட்டலில் அம்புபோடும் திருவிழா நடக்கும். ( திருநிலை அம்மன், சிவன், கொப்புடையம்மன், பெருமாள் ) ஆகிய தெய்வங்கள் குதிரை வாகனங்களில் எழுந்தருளி இருக்கும்போது மக்கள் இந்த நான்கு கோயில்களுக்கும் பகலில்  போய் மாவிளக்குப் போடுவார்கள்.

அதன் பின் மாலையில் சுவாமிகள் உலா வந்து மகர்நோன்புப் பொட்டலில் அம்பு போடுவார்கள். சுவாமி போட்ட இந்த அம்பு கிடைத்தால் விசேஷம் என்று கூட்டம் அள்ளும். சிறுகுழந்தைகளும் அன்று எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு பெற்றோருடன் வந்து ( அறுபத்துமூவர் மடம் அருகில் ) கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தில் அம்பால் குத்துவார்கள். இதற்குக் கிலுக்கி எடுத்தல் என்று பெயர். ஆண்குழந்தைகள் பிறந்த முதல் வருடத்தில் அம்பு போடுவது ( கிலுக்கி எடுத்தல்) மிக விசேஷம். எல்லா ஊர்களிலும் இருக்கும் காரைக்குடிக்காரர்கள் இந்த சமயம் காரைக்குடியில்தான் இருப்பார்கள்.

இந்த சமயம் அநேகமாக எல்லாக் கோயில்களிலும் கொலு வைக்கப்பட்டிருக்கும்.
தசாவதாரம் அருமை என்றால் அஷ்ட லட்சுமிகளும் கொள்ளை அழகு.

திங்கள், 18 மார்ச், 2019

காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.

காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.

தைப்பூசத்துக்குப் பழனி முருகனிடம் ப்ரார்த்தனை செய்துகொண்டு காவடி எடுப்பவர்கள் காரைக்குடியில் அநேகம் பேர். சுமார் 70 காவடிகளாவது வருடா வருடம் புறப்படும். பழனிக்கு போற ஐயா வீடு என்றும் அரண்மனைச் சிறுவயலார் வீடு என்றும் சொல்லப்படக் கூடிய ஒருவரின் இல்லத்தில் இந்தக் காவடிகள் வருடம் முழுமையும் பாதுகாக்கப்படும். தைப்பூசத்துக்கு 20 நாட்கள் முன்பு தமிழகத்திலும் அயல் மாநிலங்களிலிருந்தும், அயல் தேசத்தில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுக்க வேண்டிக்கொண்டு இவர்கள் இல்லத்தில் பெயர் பதிந்து வைப்பார்கள்.

தைப்பூசத்துக்கு இருபது நாட்கள் முன்பு பழனிக்குப் போற ஐயா வீட்டிலிருந்து காவடியை எடுத்து வந்து ( அவை வில் போல தனியாக இருக்கும்.  அவர்கள் இன்னும் பலவற்றைத் தனித்தனியாகக் கொடுப்பார்கள்.  நாம்தான் அந்த பேஸ், வில், காவடித் துண்டு போர்த்தி மயில் தோகை, பக்கவாட்டில் விநாயகர் எல்லாம் கட்ட வேண்டும்.  ) நல்ல உறுதியான நூல் கயிறு கொண்டு பிரம்புப் பட்டையில் வில்லாக வளைத்த காவடியில் அனைத்தையும் பொருத்திக் கட்டுவார்கள். இதைக் கட்டுமுன்பு வைராகியிடம் பூசை செய்து தீபம் காட்டி அதன் பின் கட்டுவார்கள். ( சிலர் வீட்டில் எடுத்து வந்து காவடி பூசை செய்து தீபதூபம் ஆராதனை செய்து ஊரோடு அனைவரையும் அழைத்து பூசைச் சாப்பாடு போடுவார்கள் ) . மாலையில் பானக பூசை நடக்கும். அதன் பின் வீட்டில் சொல்லிக் கொண்டு காவடியை எடுத்து வந்து சிவன் கோயிலில்  வைப்பார்கள்.( தாயார் அல்லது மனைவி மெயின் வாசல் நடையிலும் சாமிவீட்டிலும் நடுவீட்டுக் கோலமிட்டுக் குத்து விளக்கேற்றி நடையில் ஸ்லேட்டு விளக்கு வைத்து அதன் முன் காவடியோடு நிற்க வைத்து ஆலாத்தி எடுத்து விபூதி பூசி அனுப்புவார்கள். )

சிலர்  நகரச் சிவன் கோவிலிலேயே கட்டுவதும் உண்டு. காவடி கட்டுவதற்கென்று உள்ள நியமயங்கள் பல கடைப்பிடிக்கப்படுகின்றன . இங்கே சிவன் கோயில் பிரகாரத்தில் மயில் மேல் வீற்றிருக்கும் சுப்ரமண்யர் முன்பு காவடி கட்டுகிறார்கள். அநேகர் வெல்லக் காவடி கட்டுவதால் ( பழனி சென்றபின் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தில் இதைச் சேர்ப்பார்கள் ) சின்னச் சின்ன செம்புகளில் வெல்லத்தைக் கிட்டித்து வைராகியைக் கூப்பிட்டு தீப தூபம் போடச் செய்து அதைத் துணி வைத்துக் கட்டி காவடியின் இருபுறமும் இறுக்கக் கட்டுகிறார்கள்.
முதலில் விக்னம் தீர்க்கும் விநாயகரைக் கட்டுகிறார்கள். காவடிகள் விக்னமில்லாமல் சென்றுவர விநாயகரின் அருள் காவடிக்குக் கிட்டுகிறது.

கோவிலூர் மியூசியம்.

கோவிலூர் மியூசியம்.

காரைக்குடிக்கு அருகில் இருக்கும் கோவிலூரில் மியூசியம் ஒன்று இருக்கிறது. கோவிலூரில் இருக்கும் மடத்துக்குச் சொந்தமான செட்டிநாட்டுப் பாரம்பரிய அருங்காட்சியத்தை ஒரு திருமணத்துக்குச் சென்றபோது பார்த்து வந்தேன் . அங்கங்கே சில ஃபோட்டோக்களையும் சுட்டு வந்தேன் ரகசியமாக. :)
முன்பு இருந்த நாச்சியப்ப சுவாமிகள் ருக்மணி அருண்டேல் அவர்களின் நடனத்தைப் பல்வேறு புகைப்படங்களாக எடுத்தது காலரியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 14 மார்ச், 2019

16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

24 கேரட் தங்கம் தெரியும் 22 கேரட் , 18 கேரட் கூடத் தெரியும், அதென்ன பதினாறு மாற்றுத்தங்கமும் ஐநூறு மாற்றுத் தங்கமும்.

இதைத் தெரிஞ்சுக்கணும்னா  நீங்க காரைக்குடிக்குப் பக்கத்துல இருக்க மாத்தூர் கோயிலுக்கு வரணும். அங்கே கொங்கணச்சித்தர்னு ஒரு முனிவர் தாமிரத்தைத் தங்கமாக்குற இரசவாதக் கலவையைத் தயாரிச்சு சோதனை செய்து பார்த்தார். முதல்ல ஒன்பது உலோகங்களையும் சூதம், லிங்கம், அரிகாரம் இதெல்லாம் கலந்து இரசவாதம் செய்து 16 மாத்துத் தங்கத்தைத் தயாரிச்சார்.

அப்புறம் மாத்தூர்ல இருக்குற கரிமேட்டுப் புன்செய் என்கிற காட்டிலேருந்து விளாரி அப்பிடிங்கிற பச்சிலையிலேருந்து சாறு எடுத்து உலோகங்களோடு கலந்து நெருப்புவிட்டுக் காய்ச்சி 500 மாற்றுத் தங்கத்தை உருவாக்கினார்.

புதன், 13 மார்ச், 2019

ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

கோயில்களில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறும். சென்ற வருடம் காரைக்குடி கற்பகவிநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.  நெய்வேலியில் எப்போதோ முன்பொரு முறை திருவிளக்கு பூஜையைக் கோயிலில் செய்திருக்கிறேன்.

செவ்வாய், 12 மார்ச், 2019

காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே

காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

பழனி பாத யாத்திரைக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்ட காவடிகள் ஊர்வலம் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் இவை.தைப்பூசத்துக்குக் காரைக்குடியில் இருந்து நகரத்தார் காவடி, நாட்டார் காவடி இரண்டும் புறப்படும். பொங்கலை ஒட்டி இந்நிகழ்வு இருக்கும்.

அரண்மனைப் பொங்கல் ஐயா வீடு  என்று சொல்லப்படும் ஒருவர் வீட்டில்தான் காவடிகள் வைக்கப்பட்டிருக்கும். அங்கே இருந்து புறப்பட சில நாள் முன்பே காவடியைப் பெற்று வீட்டுக்குக் கொண்டு வந்து காவடி பூசை செய்து விநாயகர், சாமி வீடு , குலதெய்வ வழிபாடு எல்லாம் செய்து அதன் பின் காவடியை எடுத்துத் தோள் மேலேந்தி வீட்டில் சொல்லிக் கொண்டு அனைவரும் ஓரிடத்தில் கூடி பூசை செய்து அதன் பின் ஊர்வலம் வந்து அனைத்துக் கோயில்களிலும் வணங்கி பூசை செய்து காவடி புறப்படும். நேர்த்திக்கடனைப் பூர்த்தி செய்ய வருடந்தோறும் காவடி எடுப்பவர்கள் பெருகிவருகின்றார்கள்.

வீட்டில் நடக்கும் காவடி பூசை விமர்சையானது. கார்த்திகை வேல் பூசை போல காவடிக்கும் பூசை. மதியம் 7 காய்கறியுடன் பாயாசம் வடை அப்பளம் வைத்து  ஊரோடு விருந்து நடைபெறும்.  இதில் பாடப்படும் பாடல்கள் மன எழுச்சியையும் புத்துணர்வையும் தூண்டுவன. எனர்ஜி பூஸ்டர்ஸ் எனலாம். விருந்து முடிந்ததும் மாலை பானக பூசை செய்து நிறைவேறும்.

காவடிகள் வில்லிலிருந்து அம்பு போல் புறப்பட்டுச் செல்லும் காட்சி காணக் கண்கோடி வேண்டும். இடும்பன் சிவகிரி, சக்திகிரி மலைகளைச் சுமந்து சென்றபோது சுமையைப் பழனியில் முருகனின் திருவிளையாடலால் இறக்கி வைத்தபின் எடுக்க இயலவில்லையாம்.   வாழ்க்கையில் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகச் சுமந்து பழக இறைவனின் அருள் வேண்டியே காவடி எடுக்கப்படுகின்றது. பக்தர்கள் தம் பக்தியைச் சுமந்து இறைவனிடம் சமர்ப்பிக்கின்றனர்.
அரண்மனைப் பொங்கல் குடும்பத்தார் அனைவருக்கும் விபூதி வழங்கியபடி செல்லும் காட்சி. அக்குடும்பத்தின் இளம் சிறார்களும் பங்கேற்பார்கள்.  காவடிக்காரர்கள் நடைப்பயணம் முழுவதும் இடையில் உடுத்திய வேட்டி மட்டும்தான் உடை. சட்டை அணிய மாட்டார்கள்.

ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய மாதமாகும். செட்டிநாட்டுப் பக்கங்களில் ஒரு சாரார் புரட்டாசி விரதமும், சிலர் கார்த்திகை விரதமும் கடைப்பிடிப்பார்கள்.

திங்கள், 11 மார்ச், 2019

நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

வருடா வருடம் கொலுவுக்கு அழைப்பு வரும். சென்று ஒரு சாமிப் பாட்டைப் பாடிவிட்டு குங்குமம் வாங்கி வருவது வழக்கம். அது ஏனோ நகரத்தார் குடும்பங்களில் கொலு வைப்பதில்லை. எனவே அக்கம் பக்கம் இருக்கும் பிராமணத் தோழிகள் வீட்டில் வைக்கும் கொலுவுக்கு அழைப்பு வந்தால் கட்டாயம் போவேன். பெண்களை வணங்கும் திருவிழா என்பதால் மிகப்பிடிக்கும்.

சென்னையில் இருக்கும்போது நண்பர் அருண் வீட்டில் அவரது அம்மா வைக்கும் பிரம்மாண்ட கொலுவைப் பார்த்து அசந்ததுண்டு. தங்கை கயலுடன் இரு முறை அவர் வீட்டு கொலுவுக்குச் சென்று வந்திருக்கிறேன்.

வெள்ளி, 8 மார்ச், 2019

காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை:-
******************************

”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
தண்டாயுதபாணிக்கு அரோகரா
பழனி மலை முருகனுக்கு அரோகரா
அன்னதானப் பிரபுவுக்கு அரோகரா.”

வியாழன், 7 மார்ச், 2019

குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

திருவாசகம் என்னும் தேன்..:-
********************************
நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க.. என தினமும் பிரதோஷ நேரத்தில் நடராஜப் பெருமானை சிவபுராணம் சொல்லி வணங்குவது நகரத்தார் பழக்கம். சமீப காலங்களாக செட்டிநாட்டுப் பகுதிகளில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது அனைத்து மக்களும் பங்கேற்று வருகிறார்கள்.

திங்கள், 4 மார்ச், 2019

புதுவயல் கைலாஸ விநாயகர் கோவில்.

புதுவயல் கைலாஸ விநாயகர் கோவில்.

கடந்தவருடம் நவம்பர் 10 ஆம் தேதியன்று புதுவயல் கைலாஸ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது . உறவில் நிறையத் திருமண நிகழ்வுகள் இருந்ததால் கும்பாபிஷேகத்துக்குச் செல்ல இயலவில்லை.

கும்பாபிஷேகத்துக்காக ஒரு மலர் வெளியிடப்போவதாகவும் அதற்குப் பங்களிப்புச் செய்யுமாறும் அந்த மலர்க் கமிட்டியின் மெம்பர் திரு முத்து பழனியப்பன் அவர்கள் ( காரைக்குடி கம்பன் கழகம் ) ஃபோன் செய்தார்.

உடனே ஒரு பாடல் எழுதி அனுப்பி விட்டேன். அந்த மலர் கடந்த 5.1.2020 அன்று கோவிலுக்கு அருகே உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் வெளியிடப்பட்டது.  அது பற்றியும் போன வாரம் இடுகை ஒன்று வெளியிட்டுள்ளேன்.

இந்நூலைப் பதிப்பித்த ஆர் எம் கே வி பிரிண்டர்ஸின் உரிமையாளர் கவிதா பழனியப்பன் உங்க பாடல்தான் முதலில் வந்தது பிரிண்டுக்கு என்று சொன்னார். மகிழ்வாய் இருந்தது.எல்லாம் விநாயகன் செயல்.

ஊருக்கு நடுவே அமைந்துள்ளது இந்தக் கைலாஸ விநாயகர் கோவில். கோவில் எதிரே உள்ள ஊரணியைச் சுற்றிலும் ஒரே கடைகள் மயம். புதிதாய்க் கும்பாபிஷேகம் ஆனதால் புதுக்கருக்கு அழியாமல் மின்னிக் கொண்டிருக்கிறது கோவில். இதன் பிரகார மதில்கள் எனக்கு வியப்பூட்டின. அது என்ன என்று கடைசியில் பாருங்கள்.

சிறிய ராஜ கோபுரம் . முன் மண்டபத்தோடு காட்சி அளிக்கிறது.

கானாடுகாத்தான் சிதம்பர விநாயகர் கோவில் & ஸ்ரீ பத்மாவதி தாயார், வெங்கடேச பெருமாள் கோவில்.

கானாடுகாத்தான் சிதம்பர விநாயகர் கோவில் & ஸ்ரீ பத்மாவதி தாயார், வெங்கடேச பெருமாள் கோவில்.

கானாடுகாத்தானில் மாட்டா ஊரணிக்கரையோரம் கோயில் கொண்டிருக்கும் சிதம்பர விநாயகர் கோவில் மிக அழகானதும் கலைநயத்தோடு கட்டப்பட்டிருப்பதும் கூட. ஊரணியின் கட்டுக்கோப்பும் அழகும் காணக் கண்கோடி வேண்டும். இக்கோயிலின் அருகிலேயே கோயில் கொண்டுள்ள ஸ்ரீ பத்மாவதித் தாயார், வெங்கடேசப் பெருமாள் கோயிலும் இன்னொரு அழகான மன நிம்மதி அளிக்கும் கோயில். இங்கே கும்பிட்டுச் சென்றால் பணங்காசு பெருகுவதாக அங்கே வசிக்கும் ஒருவர் குறிப்பிட்டார்.
மிக சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன இக்கோயில்கள். பக்கத்திலேயே ஊரணியும் பூங்காவும் மகா பெரிய விருட்சங்களும் அமைந்திருப்பதால் காற்று அள்ளிக் கொண்டு போகிறது.

வெள்ளி, 1 மார்ச், 2019

ஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்.

ஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்.


குல்பர்காவிலிருந்து பிதார் செல்லும் வழியில் பசவண்ணா அவர்கள் பிறந்த கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வந்தோம். ( மாலையில் புத்தவிஹார், குல்பர்கா கோட்டையும் , மறுநாள் பிதார் குருத்துவாராவும், பிதார் கோட்டையும் சென்றுவந்தோம். )

இந்த கூடலசங்கம் கோயில் லிங்காயத் சமூகத்தினரின் புனித தல யாத்திரை இடமாக இருக்கிறது. 

////பசவண்ணா என்பவர் 12 - ஆம் நூற்றாண்டின் கர்நாடகாவின் மன்னர் பிஜாலா 1 அவர்கள் ஆட்சியில் அளிக்கப்பட்ட புலவர் ஆதரவின் கீழ் இருந்த கன்னடப் புலவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் துறவியாவார். பசவண்ணா கடவுள் சிவனின் தீவிர பக்தர் ஆவார். அவரது புரட்சிகரமான இயக்கம் தென்னிந்தியாவில் வீரசைவம் சங்கத்திற்கு (லிங்காயத் சமூகம்) எழுச்சியைத் தந்தது. கூடல சங்கமா அல்லது குடல சங்கமா என்கிற இடத்தில் பசவண்ணா தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார் மற்றும் அங்கேயே இறந்தார். எனவே லிங்காயத்களுக்கும் வீரசைவத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அவ்விடம் மிகவும் முக்கியமான புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்றாகும். மத நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் கூடலசங்கம் சங்கமேஸ்வரா கோயில் (சங்கமநாதா கோயில்) மற்றும் ஐக்ய மண்டபா (பசவண்ணாவின் சமாதி அல்லது கல்லறை) ஆகியவற்றிற்கு புகழ் வாய்ந்ததாக அறியப்படுகிறது. சித்ர துர்காவில் நீங்கள் தவறவிடக்கூடாத 5 அதி அற்புத இடங்கள்!! பசவண்ணாவின் இலக்கியங்கள் மற்றும் பழமையான கர்நாடகாவின் தொல்பொருட்களின் தொகுப்பைக் கொண்ட ஒரு அருங்காட்சியகமும் கூட அங்குள்ளது. குடலா சங்கமா பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா மற்றும் மாலாபிரபா ஆகிய நதிக்கரைகளிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். கர்நாடகாவிலுள்ள மிகப் பெரிய பக்தி இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த சுவாரஸ்யமான இடங்களில் ஒன்று திகழ்கிறது. பாகல்கோட் ஹோலி ஹப்பாவிற்கு புகழ் பெற்றதாகும். இந்தப் பண்டிகை பண்டைக் காலத்திலிருந்து அதன் ஆட்சியாளர்களால் அவர்களது மக்களிடையே மத நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை மேம்படுத்த மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தது. முன்பெல்லாம் இது 6 நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படும்.////



பசவண்ணா 1105 ஆம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர். மதராசா, மதராம்பிகை, வசனாஸ் எனப்படும் கவிதைகள் மூலம் சமூகப் புரட்சியை உருவாக்கியவர். பால் வர்க்க பேதங்களைக் களையச் சொன்னவர், மூடநம்பிக்கையை ஒழிக்கச் சொன்ன இவர் தாலி அணிவதற்கு பதிலாக லிங்கம் இஷ்டலிங்கா என்ற கழுத்தணியை அணியச் சொல்லி இருக்காராம்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.