எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஜனவரி, 2021

வெள்ளி மயிலில் வேல் முருகன்.

வெள்ளி மயிலில் வேல் முருகன்.

கார்த்திகை பூசையின்போது வெள்ளி மயிலில் வேல்முருகன் எழுந்தருளுவார். கார்த்திகை சோம வாரங்களில் நடைபெறும் பூசையின்போது தண்டாயுதத்துக்கும் வேலுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதன்பின் வெள்ளிமயிலில் வேல்முருகனை வைத்து அலங்கரிப்பார்கள். இருபக்கமும் மயில்தோகையும் தண்டாயுதமும் வேலும் வைக்கப்படும். இரு குத்துவிளக்குகளும் ஏற்றி வைக்கப்படும். காலையிலிருந்து சாமிக்குப் படையல் தீப தூபம் ஆகும்வரை ஒருவர் மாற்றி ஒருவர் முருகன் பாமாலைகள் பாட மற்றவர்களும் பின் தொடர்வார்கள். வீடே முருகன் அருளால் விபூதியோடு மணக்கும்.

முதலில் விநாயகப்பானையில் பொங்கலிடுவார்கள். இது இரட்டைப் பானையாகப் பொங்கப்படும். அதன்பின் பூசைச்சாப்பாடு ஏழெட்டுக் காய்கறி வகைகளுடன் தயாராகும். பருப்பு மசியல், கத்திரி முருங்கை அவரைகாய் சாம்பார், முட்டைக்கோஸ் துவட்டல், சௌ சௌ கூட்டு, பரங்கிக்காய் புளிக்கறி, வாழைக்காய் பொடிமாஸ், கருணைக்கிழங்கு மசியல், வெண்டைக்காய் மொச்சை மண்டி, ரசம், பலாக்காய் பிரட்டல், மோர், பாயாசம், வடை, அப்பளம் ஆகியன இடம்பெறும்.

சாதத்தை வடித்துப் பெரிய ஓலைப்பாயில் கொட்டி வைப்பார்கள். விநாயகப்பானைக்கும், சாதம், பொரியல், கூட்டு குழம்பு வகையறாவுக்கும் தூப தீபம் பார்த்தபின் முருகனுக்கு எதிரில் படையல் இடப்படும். பண்டாரம் வந்து சங்கு ஊதி தீபம் காட்ட அனைவரும் வணங்குவார்கள். பெண்கள் மாவிளக்கு வைப்பார்கள். ( அது அடுத்த இடுகையில்) . அதன் பின் ஊரோடு அனைவரும் உணவருந்திச் செல்வார்கள்.

மாலையில் பான(க்)க பூசை நடைபெறும். பூசைக்குழம்பை ( மிஞ்சிய அனைத்தையும் ஒன்றாக்கிச் சுடவைத்து ) புள்ளிக்கணக்குக்கு ஏற்பக் கொடுப்பார்கள்.

விடையேறுபாகன்.
வள்ளி தெய்வானை சமேத மயில்வாகனன்.

செவ்வாய், 19 ஜனவரி, 2021

முருகன் பூசையும் மழலைகளின் குறும்பும்.

முருகன் பூசையும் மழலைகளின் குறும்பும்.

முருகன் பூசையும் மழலைகளின் குறும்பும்.

காரைக்குடியில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தில் ( திங்கட்கிழமை ) தண்டாயுதபாணி பூசை நடைபெறும். முருகனின் தண்டத்துக்கும் வேலுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று விநாயகபானையில் பொங்கலிட்டு அதன்பின் மாபெரும் அளவில் பூசைச் சாப்பாடு செய்யப்பட்டு ஊரோடு உணவிடும் நிகழ்வு நடக்கும். 

நடுவில் முருகன் பாடல்கள், பாமாலைகள் அனைத்தும் பாடப்படும். அதோடு வெள்ளி மயில் வாகனத்தின் பக்கமிருக்கும் வேலுக்கும் தண்டாயுதத்துக்கும் ( முருகன் சமேதமாக ) மாவிளக்கு வைத்துப் பூசை செய்யப்பட்டுப் படையல் இடுவார்கள். 

அந்த நிகழ்வுக்கு வந்திருந்த குட்டிப் பிள்ளைகளின் குறும்பையும் அதோடு பெரியவர்களின் பொங்கலிடுதலையும் படம்பிடித்தேன். அவை உங்கள் பார்வைக்கு.


பூப்போலப் பூப்போலச் சிரிக்கும் :)

வெள்ளி, 8 மார்ச், 2019

காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை:-
******************************

”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
தண்டாயுதபாணிக்கு அரோகரா
பழனி மலை முருகனுக்கு அரோகரா
அன்னதானப் பிரபுவுக்கு அரோகரா.”

யூ ட்யூபில் 1931 - 1940 வீடியோக்கள். கோலங்கள்.

யூ ட்யூபில் 1931 - 1940 வீடியோக்கள். கோலங்கள். 1931.கோலங்கள் - 261 l கிராமதெய்வம்  l தேனம்மைலெக்ஷ்மணன் https://www.youtube.com/watch?v=7fdL1...