முத்து நகரில் மும்மூர்த்திகளுடன் ஸ்வர்ண விநாயகர்.
இலுப்பைக்குடிக்குச் செல்லுமுன்பு முத்து நகரில் ஒரு விநாயகர் கோயில் மண்டலாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. சென்றமாதம் நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.எனவே மண்டலாபிஷேகத்தில் கலந்து கொண்டோம்.
அலமு வீடியோஸ் திரு வெங்கடாசலம் அவர்கள் பலவருடங்களுக்கு முன்பு எழுப்பிய கோயில் இது. இதற்குக் கும்பாபிஷேகம் என்று அழைத்திருந்தார்கள். ஆனால் மண்டலாபிஷேகத்தன்றே மதியம்தான் சென்று தரிசித்தோம்.
வருபவர்களுக்கு காளாஞ்சி கொடுக்கப்பட்டவிதம் அற்புதம். ( காளாஞ்சி என்றால் அர்ச்சனை செய்த தேங்காய் பழத்தை வந்திருந்தவர்களுக்குத் தாம்பூலமாகக் கொடுப்பது. சொல்லிக் கொண்டு செல்லும்போது கொடுக்கும் பிரசாதம். ) வருபவர்கள் எல்லாம் அர்ச்சனை செய்ய முன் ஏற்பாட்டுடன் வருவதில்லை. பக்கத்தில் கடைகள் ஏதும் இல்லை.
வெங்கடாசலம் அவர்கள் அர்ச்சகர்களிடம் முன்பே தெரிவித்திருந்தபடி ஒரு சில்வர் பேசினில் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு, சூடம் ஊதுபத்தி ஆகியன வைத்து வருபவர்களிடம் பேர் நட்சத்திரம் கேட்டு அர்ச்சனை செய்து கொடுத்தார்கள். வந்தவர்களுக்கும் மகிழ்ச்சி & திருப்தி. !
அங்கேயே காலை உணவும் ( ஏழுவகைப் பலகாரம், மதிய உணவும் வழங்கப்பட்டது. கோயில் முன்பக்கம் இரட்டை ஷாமியானா போடப்பட்டு அழகாக டேபிள் சேர் போட்டுப் பரிமாறினார்கள், மதிய உணவும் ஏழு காய் கறிகளுடன் வடை பாயாசம் கட்லெட், அப்பளம், சாம்பார் சாதம் புளி சாதம், கெட்டிக் குழம்பு, சாம்பார், இளங்குழம்பு, ரசம், தயிர் , ஊறுகாய், சிப்ஸ் என கிராண்டாக இருந்தது.
அலமு வீடியோஸ் திரு வெங்கடாசலம் அவர்கள் பலவருடங்களுக்கு முன்பு எழுப்பிய கோயில் இது. இதற்குக் கும்பாபிஷேகம் என்று அழைத்திருந்தார்கள். ஆனால் மண்டலாபிஷேகத்தன்றே மதியம்தான் சென்று தரிசித்தோம்.
வருபவர்களுக்கு காளாஞ்சி கொடுக்கப்பட்டவிதம் அற்புதம். ( காளாஞ்சி என்றால் அர்ச்சனை செய்த தேங்காய் பழத்தை வந்திருந்தவர்களுக்குத் தாம்பூலமாகக் கொடுப்பது. சொல்லிக் கொண்டு செல்லும்போது கொடுக்கும் பிரசாதம். ) வருபவர்கள் எல்லாம் அர்ச்சனை செய்ய முன் ஏற்பாட்டுடன் வருவதில்லை. பக்கத்தில் கடைகள் ஏதும் இல்லை.
வெங்கடாசலம் அவர்கள் அர்ச்சகர்களிடம் முன்பே தெரிவித்திருந்தபடி ஒரு சில்வர் பேசினில் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு, சூடம் ஊதுபத்தி ஆகியன வைத்து வருபவர்களிடம் பேர் நட்சத்திரம் கேட்டு அர்ச்சனை செய்து கொடுத்தார்கள். வந்தவர்களுக்கும் மகிழ்ச்சி & திருப்தி. !
அங்கேயே காலை உணவும் ( ஏழுவகைப் பலகாரம், மதிய உணவும் வழங்கப்பட்டது. கோயில் முன்பக்கம் இரட்டை ஷாமியானா போடப்பட்டு அழகாக டேபிள் சேர் போட்டுப் பரிமாறினார்கள், மதிய உணவும் ஏழு காய் கறிகளுடன் வடை பாயாசம் கட்லெட், அப்பளம், சாம்பார் சாதம் புளி சாதம், கெட்டிக் குழம்பு, சாம்பார், இளங்குழம்பு, ரசம், தயிர் , ஊறுகாய், சிப்ஸ் என கிராண்டாக இருந்தது.
