இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும்.
தீமையை அழித்து நன்மையைப் புதுப்பிக்க சிவன் விஷ்ணு காளி மூவரும் உக்கிர வடிவம் எடுத்த ஊர் இரணியூர்.
நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனை வதம் செய்த விஷ்ணுவின் தோஷம் நீங்க சரபேசுவரராக ஆட்கொண்டார் சிவன். எனவே ஆட்கொண்டநாதராக சிவனும், நரசிம்மேஸ்வரராக விஷ்ணுவும் அருள் பாலிக்கும் தலம் இது.
இங்கே ஸ்ரீ ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி திருக்கோயிலும், ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கனகவல்லித்தாயார் திருக்கோயிலும், ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயிலும் அமைந்து அருள் பாலிக்கின்றன.
நீலமேகப் பெருமாள் கோயிலில் சிவனின் திருவிளையாடற் சிற்பங்கள் போல இங்கே தசாவதாரச் சிற்பங்களோடு கிருஷ்ணரின் பால்ய லீலைகளும் சிற்பங்களாகப் பிரகாரக் கற்சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பெருமாள் சந்நிதிக்கு முன்புற நடையின் விதானத்தில் கல்லால் செதுக்கப்பட்ட பன்னிரெண்டு ராசிகளும் மிக அழகு. அவை கண்ணையும் கருத்தையும் கவர்ந்த்தால் புகைப்படம் எடுத்தேன். அவை உங்கள் பார்வைக்கு.
“பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!”
முன்புற நடையும் வாயிலும்
நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனை வதம் செய்த விஷ்ணுவின் தோஷம் நீங்க சரபேசுவரராக ஆட்கொண்டார் சிவன். எனவே ஆட்கொண்டநாதராக சிவனும், நரசிம்மேஸ்வரராக விஷ்ணுவும் அருள் பாலிக்கும் தலம் இது.
இங்கே ஸ்ரீ ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி திருக்கோயிலும், ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கனகவல்லித்தாயார் திருக்கோயிலும், ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயிலும் அமைந்து அருள் பாலிக்கின்றன.
நீலமேகப் பெருமாள் கோயிலில் சிவனின் திருவிளையாடற் சிற்பங்கள் போல இங்கே தசாவதாரச் சிற்பங்களோடு கிருஷ்ணரின் பால்ய லீலைகளும் சிற்பங்களாகப் பிரகாரக் கற்சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பெருமாள் சந்நிதிக்கு முன்புற நடையின் விதானத்தில் கல்லால் செதுக்கப்பட்ட பன்னிரெண்டு ராசிகளும் மிக அழகு. அவை கண்ணையும் கருத்தையும் கவர்ந்த்தால் புகைப்படம் எடுத்தேன். அவை உங்கள் பார்வைக்கு.
“பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!”
முன்புற நடையும் வாயிலும்