மகாகாலேஷ்வர்,ஓம்காரேஷ்வர்,சோம்நாத்,நாகேஷ்வர் ஜோதிர்லிங்க தரிசனம்.
மஹாகாலேஷ்வர், ஓம்காரேஷ்வரர்/மமலேஷ்வரர், சோம்நாத், நாகேஷ்வர் ஆகிய நான்கு ஜோதிர்லிங்கத்தையும் துவாரகை கிருஷ்ணன், உஜ்ஜயினி மஹாகாளியையும் தரிசனம் செய்து நாளாகிவிட்டது ஆனால் இப்போதுதான் பதிவு செய்கிறேன். குஜராத், & மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள கோயில்கள் இவை.
மகாகாலேஷ்வர். மிகவும் பந்தோபஸ்துடன் அமைந்த கோவில் இது. முதல்நாளே ரேஷன்கார்டு, பான்கார்டு , வோட்டர் ஐடி ,ஆதார் போன்ற அடையாள அட்டைகளில் ஏதோ ஒன்றைக் காண்பித்துப் பதிவு செய்துகொள்ளவேண்டும். மறுநாள் விடியற்காலையில் உள்ள ஸ்பெஷல் பஸ்மாஹாரத்தி எனப்படும் மயானபூஜையைப் பார்க்கவே இது.
இங்கே காமிராவுக்கோ செல்போனுக்கோ வேலையேயில்லை. கப்சிப். எல்லாவற்றையும் அணைத்து ரூமிலேயே வைத்துவிட்டுச் சென்றுவிடவேண்டும். என் அன்பிற்குரிய சின்னத்தம்பியும் அவனது மனைவியும் துபாயிலிருந்து குடும்பத்தோடு வந்திருந்து தரிசனம் செய்தபோது என்னையும் அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்தார்கள். அவர்கள் சென்னை டு மும்பை பிளைட்டில் வர எனக்கும் ஹைதை டு மும்பை பிளைட் டிக்கெட் எடுத்திருந்தார்கள். நன்றி இருவருக்கும். :)
சவுத் மும்பையில் அமைந்திருந்த தம்பி மனைவியின் உறவினர் இல்லத்துக்குச் சென்று ( மாபெரும் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் லட்சக்கணக்கில் வாடகை உள்ள வீட்டில் இரு தளங்கள் அவர்களுடையது. காரில் அழைத்துச் சென்று திடீரென்று பிசகிவிட்ட என் கால் வலிக்கு ஜஸ்லோக் ஹாஸ்பிட்டலில் உடனடி வைத்தியம் செய்வித்தார்கள். மிக அருமையான விருந்தோம்பலும் கொடுத்த அவர்களுக்கு நன்றி ) அதன் பின் ஒவ்வொரு இடமாகப் பார்த்துவந்தோம்.
அங்கிருந்து புறப்பட்டு உஜ்ஜயின் வந்து சேர்ந்தோம். அன்று டோக்கன் வாங்கினால் மறுநாள்தான் தரிசனம்.
விடியற்காலையில் குளித்துவிட்டுக் கியூவில் சென்று நின்று இங்கே கொடுக்கப்படும் சின்ன வெங்கலச் செம்புகளில் நீரை நிரப்பி மகாகாலேஷ்வரை அபிஷேகம் செய்த அனுபவம் மறக்கவியலாதது. முக்கிய விஷயம் இங்கே பெண்குழந்தைகள் தாவணி அல்லது புடவை உடுத்தினால்தான் கருவறைக்குள் இறைவனுக்கு அருகில் செல்ல அனுமதி. பெண்களும் சுடிதார், பாண்ட், சூட் எல்லாம் உடுத்தினால் செல்ல இயலாது. கட்டாயம் புடவை அணிய வேண்டும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி என்பதால் சீக்கிரம் சென்றால் முன் இடத்தில் அமரலாம். லாப்டாப்பில் புகைப்படம் பார்த்து பேர் கேட்டு ஐடிகார்டு பார்த்துத்தான் அனுமதிப்பார்கள் என்பதால் எல்லாவற்றையும் பர்பெக்ட்டாக செய்யவும்.
அதிகாலையில் நான்குமணிக்கு க்யூவில் சென்று சாமியைத் தொட்டு அபிஷேகம் செய்த அனுபவம் மறக்கவே இயலாதது. படிப்படியாக இருக்கும் கேலரியில் சென்று அதன் பின் அனைவரும் அமர்ந்துகொள்ள வேண்டும். அன்று இரவில் இறைவனடி சேர்ந்தவர்களின் பஸ்மம் லிங்கத்தின் மேல் துணி கொண்டு தூவப்பட்டு (அல்லது இறந்தவர்களின் உறவினர்களால் இந்த பூஜைக்காக முன்பே புக் செய்யப்பட்டவர்களின் பஸ்மம் துணியில் எடுத்து வரப்பட்டு லிங்கத்தின்மேல் தூவப்படுகிறது. ) தீபஹாரத்தி காண்பிக்கப்பட்டபின் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீபம் காண்பிக்கப்படுகிறது. அத்துடன் தர்ஷன் முடிந்தது. இங்கே இருப்பவர்கள் , ஹோட்டல் வைத்திருப்பவர்கள் ,24 மணி நேரமும் சரியாகத் தூங்க முடியாது என்று தோன்றுகிறது. அடுத்தடுத்து மற்ற தர்ஷன்கள். கூட்டம்.
இது முக்கியமான ஜோதிர்லிங்க ஸ்தலம். மாபெரும் மதில்களுடன் இந்த மூன்றடுக்கு சிவன் கோயில் சிப்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பிறப்பறுக்கும் பெருமானின் சக்திஓட்டம் உள்ள கோயில் இது. நம்மை அந்த அதிர்வுகள் தாக்குகின்றன. இங்கே இருக்கும் காலபைரவர் கோயிலும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.
மகாகாலேஷ்வர். மிகவும் பந்தோபஸ்துடன் அமைந்த கோவில் இது. முதல்நாளே ரேஷன்கார்டு, பான்கார்டு , வோட்டர் ஐடி ,ஆதார் போன்ற அடையாள அட்டைகளில் ஏதோ ஒன்றைக் காண்பித்துப் பதிவு செய்துகொள்ளவேண்டும். மறுநாள் விடியற்காலையில் உள்ள ஸ்பெஷல் பஸ்மாஹாரத்தி எனப்படும் மயானபூஜையைப் பார்க்கவே இது.
இங்கே காமிராவுக்கோ செல்போனுக்கோ வேலையேயில்லை. கப்சிப். எல்லாவற்றையும் அணைத்து ரூமிலேயே வைத்துவிட்டுச் சென்றுவிடவேண்டும். என் அன்பிற்குரிய சின்னத்தம்பியும் அவனது மனைவியும் துபாயிலிருந்து குடும்பத்தோடு வந்திருந்து தரிசனம் செய்தபோது என்னையும் அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்தார்கள். அவர்கள் சென்னை டு மும்பை பிளைட்டில் வர எனக்கும் ஹைதை டு மும்பை பிளைட் டிக்கெட் எடுத்திருந்தார்கள். நன்றி இருவருக்கும். :)
சவுத் மும்பையில் அமைந்திருந்த தம்பி மனைவியின் உறவினர் இல்லத்துக்குச் சென்று ( மாபெரும் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் லட்சக்கணக்கில் வாடகை உள்ள வீட்டில் இரு தளங்கள் அவர்களுடையது. காரில் அழைத்துச் சென்று திடீரென்று பிசகிவிட்ட என் கால் வலிக்கு ஜஸ்லோக் ஹாஸ்பிட்டலில் உடனடி வைத்தியம் செய்வித்தார்கள். மிக அருமையான விருந்தோம்பலும் கொடுத்த அவர்களுக்கு நன்றி ) அதன் பின் ஒவ்வொரு இடமாகப் பார்த்துவந்தோம்.
அங்கிருந்து புறப்பட்டு உஜ்ஜயின் வந்து சேர்ந்தோம். அன்று டோக்கன் வாங்கினால் மறுநாள்தான் தரிசனம்.
விடியற்காலையில் குளித்துவிட்டுக் கியூவில் சென்று நின்று இங்கே கொடுக்கப்படும் சின்ன வெங்கலச் செம்புகளில் நீரை நிரப்பி மகாகாலேஷ்வரை அபிஷேகம் செய்த அனுபவம் மறக்கவியலாதது. முக்கிய விஷயம் இங்கே பெண்குழந்தைகள் தாவணி அல்லது புடவை உடுத்தினால்தான் கருவறைக்குள் இறைவனுக்கு அருகில் செல்ல அனுமதி. பெண்களும் சுடிதார், பாண்ட், சூட் எல்லாம் உடுத்தினால் செல்ல இயலாது. கட்டாயம் புடவை அணிய வேண்டும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி என்பதால் சீக்கிரம் சென்றால் முன் இடத்தில் அமரலாம். லாப்டாப்பில் புகைப்படம் பார்த்து பேர் கேட்டு ஐடிகார்டு பார்த்துத்தான் அனுமதிப்பார்கள் என்பதால் எல்லாவற்றையும் பர்பெக்ட்டாக செய்யவும்.
அதிகாலையில் நான்குமணிக்கு க்யூவில் சென்று சாமியைத் தொட்டு அபிஷேகம் செய்த அனுபவம் மறக்கவே இயலாதது. படிப்படியாக இருக்கும் கேலரியில் சென்று அதன் பின் அனைவரும் அமர்ந்துகொள்ள வேண்டும். அன்று இரவில் இறைவனடி சேர்ந்தவர்களின் பஸ்மம் லிங்கத்தின் மேல் துணி கொண்டு தூவப்பட்டு (அல்லது இறந்தவர்களின் உறவினர்களால் இந்த பூஜைக்காக முன்பே புக் செய்யப்பட்டவர்களின் பஸ்மம் துணியில் எடுத்து வரப்பட்டு லிங்கத்தின்மேல் தூவப்படுகிறது. ) தீபஹாரத்தி காண்பிக்கப்பட்டபின் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீபம் காண்பிக்கப்படுகிறது. அத்துடன் தர்ஷன் முடிந்தது. இங்கே இருப்பவர்கள் , ஹோட்டல் வைத்திருப்பவர்கள் ,24 மணி நேரமும் சரியாகத் தூங்க முடியாது என்று தோன்றுகிறது. அடுத்தடுத்து மற்ற தர்ஷன்கள். கூட்டம்.
இது முக்கியமான ஜோதிர்லிங்க ஸ்தலம். மாபெரும் மதில்களுடன் இந்த மூன்றடுக்கு சிவன் கோயில் சிப்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பிறப்பறுக்கும் பெருமானின் சக்திஓட்டம் உள்ள கோயில் இது. நம்மை அந்த அதிர்வுகள் தாக்குகின்றன. இங்கே இருக்கும் காலபைரவர் கோயிலும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.
