திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப்பெருமாள் ஆலயத்தில் போதி மரம்..
இத்திருத்தலைத்தைப் பார்த்ததுமே மிகக் கம்பீரமாகவும் பொலிவாகவும் இருந்தது. பெருமாள் உறையும் ஸ்தலங்கள் என் மனதிற்குப் பிடித்தமானவை. அதிலும் பள்ளி கொண்ட பெருமாள் என்றால் ரொம்பவே பிடிக்கும். ரொம்ப அட்டகாசமாக தலைக்குக் கீழே கை கொடுத்து அரவணையில் அரைத்துயிலில் அவர் அருள் பாலிப்பதே அம்சம். இங்கே வலதுகை கீழ் வைத்து சயனத்திருக்கோலத்தில் இருக்கிறார் ஸ்ரீ தர்ப்ப சயன இராமர். . முதலில் அவரது பிரம்மாண்டத் திருக்கோலத்தில் வியந்து பாத தரிசனம் செய்து திரும்பத் திரும்ப அந்தக் கண்ணனைக் கார்மேக வண்ணனைக் கரிய எம் பெருமானை கண் நிறைய வணங்கினேன்.
