எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். வரணும் வரணும் கணபதியே.

ஸ்ரீ மஹா கணபதிம். வரணும் வரணும் கணபதியே.

  ஸ்ரீ மஹா கணபதிம்.

வரணும் வரணும் கணபதியே. 

குங்குமச் சிமிழ், பொட்டு ஆணி. இதில் குங்குமச் சிமிழில் விநாயகர். 

தேங்காய்ச்சட்டி, அர்ச்சனைத் தாம்பாளம், மிட்டாய் ஸ்டாண்டு, வேவுக்கடகாம் , குடம் அனைத்திலும் விநாயகர். 

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். சக்தியின் மைந்தா கணபதியே

ஸ்ரீ மஹா கணபதிம். சக்தியின் மைந்தா கணபதியே

  ஸ்ரீ மஹா கணபதிம்.

சக்தியின் மைந்தா கணபதியே.

காரைக்குடி நெல்லி மரத்துப் பிள்ளையார். 



காரைக்குடி முனியையா கோவில். பிள்ளையார்தான் இங்கே முனியையா. 

திங்கள், 25 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். சரணம் சரணம் கணபதியே.

ஸ்ரீ மஹா கணபதிம். சரணம் சரணம் கணபதியே.

 ஸ்ரீ மஹா கணபதிம். 

சரணம் சரணம் கணபதியே. 

இவர் கொஞ்சம் ஸ்பெஷல் ஜெர்மனியில் என் மருமகள் சென்றவருடம் விநாயகர் சதுர்த்திக்காகச் செய்த விநாயகர். 

ஒரு நண்பரின் கிரஹப் ப்ரவேசத்துக்காக தேர்ந்தெடுத்த  விநாயகர்கள். 

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். காரமர் மேனிக் கணபதியே.

ஸ்ரீ மஹா கணபதிம். காரமர் மேனிக் கணபதியே.

 

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

ஸ்ரீ மஹா கணபதிம். 

பெங்களூரு செட்டி முருகன் கோவில் கோபுரத்தில் விநாயகர். 

வியாழன், 21 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.

ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.

கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)

ஏழு சுரங்களில் இன்னிசை பாட
எங்கணும் இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)

தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென க­ரென் றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க

(கணபதியே)

ஸ்ரீ மஹா கணபதியே நமஹ. 


கோவை ஆர் எஸ் புரம் அன்னபூரணாவின் கீழ்த்தளத்தில் இருக்கும் விநாயகர்.

புதன், 20 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்.

ஸ்ரீ மஹா கணபதிம். நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்.

ஸ்ரீமஹா கணபதிம் நமஹ.

காக்கும் கடவுள் கணேசனை நினை
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்
உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை!!!

பசவங்குடி விநாயகர்.


க்ரீட்டிங்ஸ் விநாயகர்.

ஸ்ரீ மஹா கணபதிம். அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்.

ஸ்ரீ மஹா கணபதிம். அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்.

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ.

யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்
ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ.

பெங்களூரு சிக்கபேட்டையில் ஒரு கடையில் வீற்றிருந்த விநாயகர். 


குடி புகுதலில் துணை வந்த லெக்ஷ்மியும் விநாயகரும் பாலமுருகனும். 

செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். காக்கும் கடவுள் கணேசனை நினை.

ஸ்ரீ மஹா கணபதிம். காக்கும் கடவுள் கணேசனை நினை.

ஸ்ரீ மஹா கணபதிம்.காக்கும் கடவுள் கணேசனை நினை. 

காக்கும் கடவுள் கணேசனை நினை 
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருள் துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள அகல அவன் அருள் துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை. 

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ.

திருப்புல்லாணி கோவிலுக்கருகில் என நினைக்கிறேன். 


இவர் ராமேஸ்வரம் நகர விடுதி விநாயகர். 

திங்கள், 18 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். அருள்பொழி கண்ணால் அருள்வாய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம். அருள்பொழி கண்ணால் அருள்வாய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம். அருள்பொழி கண்ணால் அருள்வாய் போற்றி.

மருள்சேர் மனத்தின் மாயை அகல
அருள்பொழி கண்ணால் அருள்வாய் போற்றி
கருஉயிர் அனைத்தும் தன்னுள் காக்கப்
பெருவயிறு வாய்த்த பிள்ளாய் போற்றி
இருவேறு கூறுகள் இணைந்தாய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம்.

ப்ரஸன்ன மஹால் கணபதி.
தாம்பரம் இரட்டை விநாயகர்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம்.

தேவாரம் சேர்திருச் செவியாய் போற்றி
நத்துவார் தமக்கு நலம்பல பயக்கும்
முத்தே போற்றி மூலமே போற்றி
ஒற்றைக் கொம்பை உடையாய் போற்றி
அற்றம் அகற்றும் ஐயா போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம்.
கடலூர் ரயில்வே ஸ்டேஷன் விநாயகர்.
அதே கோயிலின் பின் பக்கம்

வியாழன், 14 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம்.

நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்றி.
போற்றுவார்க்(கு) அருளும் புண்ணியா போற்றி
நம்பிக்கைவைப்பார்தம் நாதா போற்றி
தும்பிக்கை யான்நீ துணையே போற்றி
நாவாரப் பாடும் நல்லமிழ் மந்திரமாம்.

ஸ்ரீமஹாகணபதிம்.

காரைக்குடி நகரச் சிவன் கோவிலில் இயற்கை ஓவியமாய் விடையேறுபாகன், சுப்ரமண்யருடன் விநாயகர்.

புதன், 13 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். அம்புவி தாங்கும் அறமே.

ஸ்ரீ மஹா கணபதிம். அம்புவி தாங்கும் அறமே.

ஸ்ரீ மஹா கணபதிம்.

அம்புவி தாங்கும் அறமே போற்றி
மலைமகள் உகக்கும் மைந்த போற்றி
கலையெலாம் காக்கும் கற்பகம் போற்றி
கரிமா முகனைக் காய்ந்தாய் போற்றி
கரிமுகம் படைத்த கணபதி போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம்.

தோழியின் வீட்டில் வரவேற்கும் விநாயகர்.
கெஸ்ட் ஹவுஸ் வாசலில்.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். ஓமெனும் சொல்லின் உருவே.

ஸ்ரீ மஹா கணபதிம். ஓமெனும் சொல்லின் உருவே.

ஸ்ரீ மஹா கணபதிம்.

ஓமெனும் சொல்லின் உருவே போற்றி.
நாமம் ஆயிரம் நயப்பாய் போற்றி
வேழ முகத்து விநாயகா போற்றி
ஏழைக்(கு) இரங்கும் ஏரம்ப போற்றி
செம்பொன் சிவனின் சேயே போற்றி.

ஸ்ரீ மஹா கணபதிம் நமஹ.
நெல்லிமரத்துப் பிள்ளையார்.

திங்கள், 11 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.

ஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.

விநாயகரைத்தான் நாம் எப்படி எல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். எந்தக் கடவுள் இல்லாத இடத்திலும் விநாயகர் இருப்பார்.அரசமரத்தடி, தெரு முக்கு, முட்டுச் சந்து,குளக்கரை, ஊரணி, நதிக்கரை என்று எங்கு பார்த்தாலும் நாம் காணக்கூடிய ஒருவர் நம்பிக்கை அளிக்கும் தும்பிக்கையான் தான்.

இன்னும் வீட்டின் கேட் , ஜன்னல் க்ரில், முன் வாயில் கதவுக்கு மேல், கதவில் மரச்சிற்பமாய், வீட்டில் அலங்காரமாய், கல்யாண மண்டபங்களில், தியேட்டர்களில், ஷாப்பிங் மால்களில், திருமணக் கூடங்களில் , சிறு பெரு விழாக்களில் என்று எங்கெங்கு நோக்கினும் நம்ம ஸ்வீட் டார்லிங் பிள்ளையார் இல்லாமல் இல்லை :)  

கிட்டத்தட்ட 74 இடுகைகள் வந்திருக்கு 750 க்கும் மேற்பட்ட விநாயகர்களைப் படம் பிடித்துள்ளேன். :) கோயில்களிலும் கோபுரங்களிலும் ஆட்சி செய்தவர் இன்று என் வலைத்தளத்திலும் பேராட்சி செய்கிறார். 

கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)
ஏழு சுரங்களில் இன்னிசை பாட
எங்கணும் இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)

தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென க­ரென் றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க
(கணபதியே)

ஸ்ரீ மஹா கணபதிம்.

ஒரு கல்யாண மண்பத்தில் மணவறையில். நல்லதே நடக்கும் என அருள் பாலிக்கிறார்.

இளையாற்றங்குடி சத்திரத்தின் முகப்பில் இம்மூன்று விநாயகர்களும்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். ஜெய் கணேச பாஹிமாம்.

ஸ்ரீ மஹா கணபதிம். ஜெய் கணேச பாஹிமாம்.

ஜெய் கணேச ஜெய் கணேச ஜெய் கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷமாம்.

ஸ்ரீ மஹா கணபதிம்.

சொற்கேட்டான் விநாயகர். எப்பவுமே மிக அழகு.
உறவினர் ஒருவர் இல்லத்தில் ஓவிய கணபதி.

வியாழன், 7 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். பிள்ளையார் சுழிபோட்டு செயல் எதையும் தொடங்கு.

ஸ்ரீ மஹா கணபதிம். பிள்ளையார் சுழிபோட்டு செயல் எதையும் தொடங்கு.

ஓரானைக் கன்றை, உமையாள் திருமகனை,
போரானைக் கற்பகத்தைப் பேணினால்
வாராத புத்தி வரும், வித்தை வரும்
உத்திர சம்பத்து வரும் சக்தி தரும் சித்தி தரும் தான்.
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
பிள்ளையார் சுழி போட்டு செயல்
எதையும் தொடங்கு அதன் துணையாலே 
சுகம் கூடும் தொடர்ந்து
அழியாத பெருஞ்செல்வம் அவனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்
வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர
அருள் மணிகள் ஒலிக்கும்
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதையும் தொடங்கு.

ஸ்ரீ மஹா கணபதிம். 
இவர் சூரியனார் கோவில் அல்லது கஞ்சனூர் கோவிலின் முன்பு தனிக்கோயிலாகக்  குடி கொண்டவர்.

புதன், 6 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். - திருப்புகழ் அமுதம்.

ஸ்ரீ மஹா கணபதிம். - திருப்புகழ் அமுதம்.

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான

......... பாடல் .........

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
     பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
     பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
     சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
     செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
     எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
     ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
     விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
     வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.

---- ஸ்ரீ மஹா கணபதியே நமஹ. 

மகாபலிபுரம் சிற்பங்களால் நிரம்பியது. ஐந்து ரதம் போகும் வழியில் பல்வேறு கடைகளிலும் காணக்கிடைத்த சிற்பங்களில் நம்ம புள்ளையாரும் :) மாக்கல், மார்பிள் என்று விதம் விதமான பிள்ளையார்கள் காணக்கிடைத்தார்கள்.

ஷிர்டி சாய்  பாபாவும் பிள்ளையாரும்.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.

ஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.

சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!

கடன் தீர்க்கும் கணபதியைத் தோரண கணபதி என்கிறார்கள். இங்கே எல்லா கணபதியையும் பகிர்ந்துள்ளேன். ஆனால் தோரண கணபதி ஸ்துதியைப் போட்டிருக்கிறேன். தோரண கணபதி ஒவ்வொரு ஆலயத்திலும் அம்பிகையின் வலப்புறம் தனிசந்நிதியில் வீற்றிருப்பார் :) நம்முடைய பிறவிக் கடனைத் தீர்க்கும்படி இந்த விநாயக சதுர்த்தியில் வேண்டிக் கொண்டேன்.

ஸ்ரீ மஹா கணபதிம்.

ஆங் சொல்ல மறந்துட்டேன் நம்ம நெல்லிமரத்துப் பிள்ளையார் கோயிலில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி - 1. 9. 2017. அன்று காலை கும்பாபிஷேகம். எல்லாரும் வந்து தரிசித்து அருள் பெறுக. 

இவர்தான் நம்ம நெல்லிமரத்துப் பிள்ளையார். 

இவர் நம்ம சந்தான கணபதி சஞ்சீவி ஆஞ்சநேயருடன்

திங்கள், 4 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை.

ஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை.

ஸ்ரீ மஹா கணபதிம்

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கரும மாதலால்
கணபதி என்றிடக் கரும மில்லையே

-திருமூலர் 


ஓம் விநாயகா சரணம். 


காரில் காக்கும் கணபதி.


கோவை ஸ்பினோஸில் எடுத்தது.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

ஸ்ரீ மஹா கணபதிம். அழகு அழகு எங்கள் கணபதி அழகு

ஸ்ரீ மஹா கணபதிம். அழகு அழகு எங்கள் கணபதி அழகு

ஸ்ரீ மஹா கணபதிம்.

அழகு அழகு எங்கள் கணபதி அழகு
அழகு அழகு எங்கள் கணபதி அழகு

ஐந்து கரத்தில் நிற்கும் ஐயன் ஆஹா பேரழகு
ஒற்றைக்கொம்பில் நிற்கும் ஐயன் அழகோ பேரழகு

முந்திய தொந்தியில் நிமிர்ந்து நிற்கும் ராஜனின் மேனி பேரழகு
பறந்து விரிந்த விசால மார்பில் பூணூல் பேரழகு

அருகம் புல்லும் எருக்கமாலை அணிகலனாய் அழகு
பக்தனின் உள்ளம் கவரும் கருணைக் கண்கள் கொள்ளை பேரழகு

பக்தர் துயர்தனை துடைக்க விசிறி துருத்தும் அவன் செவி பேரழகு
பெருத்த மேனிக்கு சிறுத்த வாகனம் மூஞ்சுறும் அழகு

உலகம் வியக்கும் அழகிர்க்கழகு கணபதியே அழகு ........

---  thanks http://eshwarapeetam.org/
 
திருச்செங்கோட்டு வேலவனின் கோபுரத்தில் ஒரு பக்கம் முழுதும் ஐந்து நிலைகளிலும்வீற்றிருக்கும் கணபதி.
முன்புறம் இருக்கும் பிரம்மாண்ட கணபதி.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.