எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

காரைக்குடியில் ஸ்கந்தர்சஷ்டி விழாவும் திருப்புகழ் பாராயணமும்.

 காரைக்குடியில் ஸ்கந்தர்சஷ்டி விழாவும் திருப்புகழ் பாராயணமும்.

கடந்த ஆறு நாட்களாக காரைக்குடி நகரச் சிவன் கோயிலில் ஸ்கந்தர்சஷ்டி விழா நடைபெற்றது. முதல் நாள் திருமதி பாலாம்பாள் ஆச்சி அவர்கள் ஸ்கந்தபுராணம் படித்தார்கள். 
அதன் பின் காரைக்குடி திருவாசகம் முற்றோதல் குழுவின் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது. இவர்களைத் திருக்கோயில் நிர்வாகத்தினர் மரியாதை செய்து சிறப்பித்தார்கள்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

அறுபடை முருகன் கோயில்கள் :- திருத்தணி.

அறுபடை முருகன் கோயில்கள் :- திருத்தணி.

திருச்செந்தூரில் போர்புரிந்து வினையெல்லாம் தீர்த்த கந்தன்
திருத்தணி கோயில் கொண்டானாம்
அவன் பக்தர்கள் எல்லாம் காவடி தூக்கி வந்தாராம்

நெருங்கிச் செல்லுங்கள் முருகனின் ஊரை
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை.
வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா ... அரோகரா .

அழகெல்லாம் முருகனே
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே
தெய்வமும் முருகனே.. ! தெய்வமும் முருகனே.
சென்னையில் இருந்து 87 கிமீ தூரத்தில் இருக்கிறது திருத்தணிகை. சுவாமிமலையில் தமிழ் வருடத்தின் 60 படிகள்  (என்றால் இங்கே ஒரு வருடத்தின் 365 நாட்களையும் குறிக்கும்படி 365 படிகள் உள்ளன என குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் படிகள் குறைவுதான். இன்னொரு இணைப்பில் 60 படிகள்தான் உள்ளதாக குறிப்பிடுகிறார்கள். காரில் சென்றதால் தெரியவில்லை.  ) நடக்க எளிதானவைதான்.  ஒரு மாலையில் சென்றோம். மிக இனிமையாகவும் குளுமையாகவும் இருந்தது.

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அறுபடை முருகன் கோயில்கள் :- சுவாமிமலை/திருவேரகம்

 அறுபடை முருகன் கோயில்கள் :- சுவாமிமலை/திருவேரகம்

ஈசனோடு பேசியது போதுமே
என்னோடும் பேசுசாமி நாதனே
ஆசையோடு தமிழெடுத்துப் பாடினேன்
ஐயாஉன் திருவடியை நாடினேன்


கண்சீறும் பொறியூறி பிறந்தவா
கமலத்தில் அன்று நீயும் தவழ்ந்தவா
தண்ணீரில் சளியுனக்குப் பிடிக்குமே
சரவணத்துப் பொய்கைவிட்டு எழுந்துவா 


கடலோரம் நிற்பவனே சண்முகா
கடல் நீரால் உடல் அரிக்கும் அல்லவா
நடமாடும் மயிலேறி இங்குவா
நல்ல மனக் கோயிலுண்டு தங்கவா

குன்றத்திலே கல்யாணம் ஆனதால்
குவலயத்தை நீமறத்தால் நியாயமா
குன்றத்தையும் விட்டிறங்கி ஓடிவா
கொஞ்சு தமிழ் இசைகேட்டு ஆடிவா

பன்னிரண்டு கண்களாடுந் தெய்வமே
என்னை மட்டும் காணமனம் இல்லையோ
உன்னை விட்டு யாரை இனி நம்புவேன்
சண்முகனே என்னுடனே வம்புஏன்

ஒன்றிரண்டு விழியேனும் திறந்திடு
ஓரவிழிப் பார்வையேனும் புரிந்திடு
என்றுமுனை நம்பிநின்றேன் வரங்கொடு
ஏற்றமுடன் யான் வாழ வரங்கொடு. 


-- நன்றி பஜனை.காம். 

 அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா,

நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமிமலை.
கந்தன் ஒரு மந்திரத்தை..
கந்தன் ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன மலை.. சுவாமி மலை.

கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்.
சிறுவயதில் மன்னார்குடியில் இருந்து ஒவ்வொரு கிருத்திகைக்கும் அப்பா டாக்சி எடுத்து குடும்பத்தோடு அழைத்துச் சென்று சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை தரிசனம் செய்துவைப்பார்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

அறுபடை முருகன் கோயில்கள் :- பழனி/திருஆவினன்குடி

அறுபடை முருகன் கோயில்கள் :- பழனி/திருஆவினன்குடி

அறுபடை முருகன் கோயில்கள் :- பழனி

பழனி மலை முருகா
பழனித் திருக்குமரா
பழம் ஒன்று எந்தனுக்குத் தா
ஞானப் பழம் ஒன்று எந்தனுக்குத் தா

முருகனைக் கூப்பிட்டு
முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே
பழனி முருகனைக் கூப்பிட்டு

பழனி என்னும் ஊரிலே
பழனி என்னும் பேரிலே
பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே
முருகன் பலனும் தந்தான் நேரிலே.
இராக்கால மடத்தில் வழிபடப்படும் தெண்டாயுதபாணி 
"ஆண்டிக் கோலத்தில் அமர்ந்தாய் தண்டுடனே" என்று பாடல் பாடினாலும் எல்லாரும் தரிசிக்க விரும்புவது பழம் நீ இராஜ அலங்காரனையே. காலையில் பழனி தெண்டாயுதபாணி  பாலதண்டாயுதபாணியாகவும் மதியம்  வைதீகக்  கோலத்திலும் மாலை இராஜ அலங்காரத்திலும்  காட்சி அளிக்கிறார் முருகப் பெருமான்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

அறுபடை முருகன் கோயில்கள் :- திருச்செந்தூர்.

அறுபடை முருகன் கோயில்கள் :- திருச்செந்தூர்.

அறுபடை முருகன் கோயில்கள் :- திருச்செந்தூர்.

"திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில்நாதன் அரசாங்கம்.
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்.

இது அசுரரை வென்ற இடம்
இது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசத்திலும் வரும் ஐப்பசி திங்களிலும்
அன்பர்  திருநாள் காணுமிடம்.  "

இந்தப் பாடலை கேட்காத குழந்தைகளே இருக்க முடியாது 80களில். 85களில் கல்லூரிப் பருவத்தில்  ( தாழையூத்து சிமிண்ட் பேக்டரி, தாரங்கதாரா NaOH FACTORY  , ஸ்பிக் ஆகியவற்றுக்கு எஜுகேஷன் டூர் செல்லும்போது வழியில் மணப்பாடு, உவரி, தூத்துக்குடி துறைமுகம், திருச்செந்தூர் முருகன் கோயில், கன்னியாகுமரி ஆகியன சென்றுவந்தோம். ) ஒரு முறை திருச்செந்தூர் சென்றிருக்கிறேன். அப்போது தாயத்தில் ஒரு ரூபாய்க்குள் உருளும் சாமி என ஒரு கவிதை  எழுதி இருக்கிறேன்.

மிக நீண்ட நடையில் சென்றபின் கோயில் வரும். அதற்கு அணைவாய் அலைகளுடன் துள்ளும்  கடல். அங்கே வள்ளி ஒளிந்த இடம் சென்றிருக்கிறோம் அப்போது. சிறு குகை போன்றிருக்கும்.


2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கடற்கரைக் ( கடல் அழிக்காத ) கோயில். ஒன்பது நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நம்மை வரவேற்கும். இரு சுற்றுப் பிரகாரங்கள். குழந்தை வடிவில் சேயோன் கோயில் கொண்ட கருவறை,  குகை போலக் காட்சி அளிக்கிறது.

புதன், 12 ஆகஸ்ட், 2020

அறுபடை முருகன் கோயில்கள். :- பழமுதிர்சோலை

அறுபடை முருகன் கோயில்கள். :- பழமுதிர்சோலை

சின்னஞ்சிறு முருகா சீர் முருகா
வண்ணமயில் முருகா மால் மருகா
......................................................
சுட்ட பழம் வேண்டுமா
சுடாத பழம் வேண்டுமா என்று
ஒளவையைக் கேட்டவனே  

என்று சிறுவயதில் பாடுவதுண்டு. தமிழ்ப் பாட்டி ஒளவையைச் சிறுவனாய் வந்த முருகன் சோதித்த இடம் இது. ஓளவைக்காக நாவல் பழங்களை முருகன் உதிர்த்த ஸ்தலமாதலால் இது சோலை மலை என்றும். பழமுதிர் சோலை என்றும் அழைக்கப்படுகிறது.

அறுபடை வீடுகளில் மதுரையில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தைத் தரிசித்தவுடன் மறுநாளே ஆறாம் படைவீடான பழமுதிர்சோலைக்குச் சென்றோம். இது கள்ளழகர், சோலைமலை முருகன், பதினெட்டாம்படிக் கருப்பர், ராக்காயி அம்மன் கோயில் ஆகிய நான்கு கோயில்கள் இணைந்த ஸ்தலமாகும். இது திருமாலும் அவர் மருமானும் கோயில் கொண்ட இடம். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான இடம்.

அழகன் முருகனைப் பார்க்கப் போனால் வேலும் மயிலும்தானே கூட வரவேண்டும். ஆனால் இங்கோ அரிவாள் கூட வந்தது. அதுவும் அங்கே முதலில் பதினெட்டாம்படிக்கருப்பருக்கு  அரிவாள் வேண்டுதல் செலுத்தச் சென்ற மக்கள் கூட்டம் இது.

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

திரு உத்திரகோசமங்கை

திரு உத்திரகோசமங்கை

ராமேஸ்வரம் செல்லும் வழியில் இக்கோயிலுக்குச் செல்லாதவர்கள் குறைவு. ஆதியில் தோன்றிய  சிவன் கோயில் என்று இதைச் சொல்கிறார்கள். இந்த உத்திரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி என்கிறார்கள்.
மாபெரும் ஏழுநிலை, ஐந்துநிலை கோபுரங்கள். நீண்ட பிரகாரங்கள். பல சுற்று அமைந்திருக்கின்றன இப்பிரகாரங்கள். நிறைய தனிச்சந்நிதிகள்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.

இரணியூரில் குபேர ஹோமமும் பச்சைக் குங்குமமும்.

இரணியூரில் வளர்பிறை அஷ்டமி விசேஷம். தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்ததுபோல் வளர்பிறை அஷ்டமி குபேரனுக்கு உகந்தது என்கிறார்கள். ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியை குபேரன் வணங்கி அருள் பெற்ற ஸ்தலம் என்பதால் விசேஷம். நாமும் அவரை வணங்கினால் அருளும் பொருளும் வழங்கி செழிப்படைய வைப்பார் என்பது நம்பிக்கை

இந்த ஹோமம் ஓவ்வொரு மாதமும் வளர்பிறை அஷ்டமியில் அங்கே இருக்கும் யாக/ஹோம மண்டபத்தில் நிகழ்கிறது. முன்பே இதற்குப் பதிவு செய்திருக்கிறார்கள். எங்கள் உறவினரின் அழைப்பின்பேரில் சென்றிருந்தோம்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும்.

இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும்.

இளையாற்றங்குடிக் கைலாசநாதர்கோயில் காரைக்குடியில் இருந்து 27 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது பற்றி விரிவாக இன்னொரு இடுகை எழுதுவேன். இப்போது அங்கே கண்டு தரிசித்த தெய்வத்திருவுருவங்களின் ஓவியங்கள் சில உங்கள் பார்வைக்கு.
நர்த்தன நடராஜர். கைலாசநாதரும் நித்யகல்யாணி அம்மையும்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.