அறுபடை முருகன் கோயில்கள் :- திருச்செந்தூர்.
அறுபடை முருகன் கோயில்கள் :- திருச்செந்தூர்.
"திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில்நாதன் அரசாங்கம்.
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்.
இது அசுரரை வென்ற இடம்
இது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசத்திலும் வரும் ஐப்பசி திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம். "
இந்தப் பாடலை கேட்காத குழந்தைகளே இருக்க முடியாது 80களில். 85களில் கல்லூரிப் பருவத்தில் ( தாழையூத்து சிமிண்ட் பேக்டரி, தாரங்கதாரா NaOH FACTORY , ஸ்பிக் ஆகியவற்றுக்கு எஜுகேஷன் டூர் செல்லும்போது வழியில் மணப்பாடு, உவரி, தூத்துக்குடி துறைமுகம், திருச்செந்தூர் முருகன் கோயில், கன்னியாகுமரி ஆகியன சென்றுவந்தோம். ) ஒரு முறை திருச்செந்தூர் சென்றிருக்கிறேன். அப்போது தாயத்தில் ஒரு ரூபாய்க்குள் உருளும் சாமி என ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்.
மிக நீண்ட நடையில் சென்றபின் கோயில் வரும். அதற்கு அணைவாய் அலைகளுடன் துள்ளும் கடல். அங்கே வள்ளி ஒளிந்த இடம் சென்றிருக்கிறோம் அப்போது. சிறு குகை போன்றிருக்கும்.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கடற்கரைக் ( கடல் அழிக்காத ) கோயில். ஒன்பது நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நம்மை வரவேற்கும். இரு சுற்றுப் பிரகாரங்கள். குழந்தை வடிவில் சேயோன் கோயில் கொண்ட கருவறை, குகை போலக் காட்சி அளிக்கிறது.