நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.
காரைக்குடியில் இருந்து நேமங்கோவில் 13 கிமீ தூரத்தில் உள்ளது. குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, வைரவன் பட்டிவழியாகச் செல்லலாம். குன்றக்குடியின் வடக்குப் பாதை வழியாகவும் செல்லலாம். இது கொஞ்சம் கிட்டப்பாதை.
சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயிலையும் கூறலாம். பிரகாரத்தில் அலங்கரிப்பது எல்லாமே உக்கிர தெய்வங்கள்.
ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மைக் கம்பீரமாக வரவேற்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கோவில் இது. நகரத்தார்களின் ஒன்பது கோவில்களில் இதுவும் ஒன்று.
இக்கோவிலின் புஷ்கரணியின்பெயர் சோழ தீர்த்தம். மிக அழகான தாமரைத்தடாகம் அது. இக்கோயிலின் எதிரே சத்திரம் உள்ளது. இங்கும் சஷ்டியப்த பூர்த்தி செய்துகொள்வோர் உண்டு.
இக்கோவிலில் விநாயகர் ஆவுடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பு.
சந்நிதிக்குச் செல்லும் முன் வாயிலின் விதானத்தில் ரிஷபாரூடர், மீனாக்ஷி திருக்கல்யாணம், நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக காலபைரவரைச் சுற்றி இருக்கும் காட்சி., சனகாதி முனிவர்களுடன் கல்லாலின் புடை அமர்ந்த தக்ஷிணாமூர்த்தி. என அழகு ஓவியங்கள்.
சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயிலையும் கூறலாம். பிரகாரத்தில் அலங்கரிப்பது எல்லாமே உக்கிர தெய்வங்கள்.
ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மைக் கம்பீரமாக வரவேற்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கோவில் இது. நகரத்தார்களின் ஒன்பது கோவில்களில் இதுவும் ஒன்று.
இக்கோவிலின் புஷ்கரணியின்பெயர் சோழ தீர்த்தம். மிக அழகான தாமரைத்தடாகம் அது. இக்கோயிலின் எதிரே சத்திரம் உள்ளது. இங்கும் சஷ்டியப்த பூர்த்தி செய்துகொள்வோர் உண்டு.
இக்கோவிலில் விநாயகர் ஆவுடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பு.
சந்நிதிக்குச் செல்லும் முன் வாயிலின் விதானத்தில் ரிஷபாரூடர், மீனாக்ஷி திருக்கல்யாணம், நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக காலபைரவரைச் சுற்றி இருக்கும் காட்சி., சனகாதி முனிவர்களுடன் கல்லாலின் புடை அமர்ந்த தக்ஷிணாமூர்த்தி. என அழகு ஓவியங்கள்.
