மெய்யாத்தாள் படைப்பு.
காரைக்குடியில் மெய்யாத்தா செட்டியப்ப ஐயா படைப்பு கடந்த ஃபிப்ரவரி 14 அன்று நிகழ்ந்தது. எல்லாப் படைப்பையும் விட இந்தப் படைப்புக்கு அதிக கூட்டம். ஏனெனில் அனைவருமே வந்து பங்கேற்கலாம் என்பதே இதன் சிறப்பு. மற்றைய படைப்புகள் ( அக்கினி ஆத்தா, பாப்பாத்தி, அழகன் செட்டி ) போன்ற படைப்புகள் அவரவர் ஐயாக்கள் வீடுகள் , பங்காளிகள் வீடுகள் மட்டுமே பங்கேற்கக்கூடியதாக இருக்கும்.
அனைத்துமே வருஷப் படைப்பாக இருக்கும். மாசி மாசம் என்பது படைப்பதற்கு உகந்த மாதமாக இருக்கிறது. சிலர் ஆடியிலும் படைக்கிறார்கள். முன்னோரை வணங்குவதும், குலதெய்வத்தை வணங்குவதும் வாழ்க்கைக்கான காப்பு.
எங்கள் மெச்சி பெரியத்தா ( மெய்யம்மை ) ஆவிச்சி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் அவ்வப்போது மெய்யாத்தா படைப்புப் பற்றியும் அனைவரும் வரலாம் என்பது பற்றியும் கூறி புடவை வாங்கி வைப்பதாகக் கூறுவார்கள். அதே சமயம் அங்கே வைக்கப்படும் புடவைகளைப் படைப்பு முடிந்ததும் ஏலத்தில் எடுக்கவும் பலர் போட்டி போடுவார்கள். ஏனெனில் இங்கே போழை/பேழை கட்டாமல் ( அதில் வைக்கப்படாமல் ) அந்தப் புடவைகள் அவ்வப்போது ஏலம் விடப்படுவதுண்டு. குழந்தைப் பேறு வேண்டுவோர், திருமணம், வேலை கிடைக்க வேண்டுவோர் இவற்றை ஏலத்தில் எடுப்பார்கள்.
அனைத்துமே வருஷப் படைப்பாக இருக்கும். மாசி மாசம் என்பது படைப்பதற்கு உகந்த மாதமாக இருக்கிறது. சிலர் ஆடியிலும் படைக்கிறார்கள். முன்னோரை வணங்குவதும், குலதெய்வத்தை வணங்குவதும் வாழ்க்கைக்கான காப்பு.
எங்கள் மெச்சி பெரியத்தா ( மெய்யம்மை ) ஆவிச்சி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் அவ்வப்போது மெய்யாத்தா படைப்புப் பற்றியும் அனைவரும் வரலாம் என்பது பற்றியும் கூறி புடவை வாங்கி வைப்பதாகக் கூறுவார்கள். அதே சமயம் அங்கே வைக்கப்படும் புடவைகளைப் படைப்பு முடிந்ததும் ஏலத்தில் எடுக்கவும் பலர் போட்டி போடுவார்கள். ஏனெனில் இங்கே போழை/பேழை கட்டாமல் ( அதில் வைக்கப்படாமல் ) அந்தப் புடவைகள் அவ்வப்போது ஏலம் விடப்படுவதுண்டு. குழந்தைப் பேறு வேண்டுவோர், திருமணம், வேலை கிடைக்க வேண்டுவோர் இவற்றை ஏலத்தில் எடுப்பார்கள்.