காரைக்குடிக்கு அருகே கல்வி, செல்வம் , சந்தோஷம் அளிக்கும் கோயில்கள்.
காரைக்குடிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி உலகப் புகழ் வாய்ந்த கோயில்கள். ஆனால் இங்கே குன்றக்குடி பிள்ளையார்பட்டி சாலையில் இருக்கும் லெக்ஷ்மி குபேரர் கோயில்( வாஸ்து கோயில் ), ஞான சரஸ்வதி கோயில் மற்றும் பாதரக்குடி அருகே இருக்கும் சந்தோஷி மாதா கோயில்களும் சிறப்பு வாய்ந்தவைதாம்.
விநாயகருக்கு அருகில் லெக்ஷ்மி , சரஸ்வதி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் புகைப்படங்களில் . அதே போல் சந்தோஷி மாதா விநாயகரின் மகள். இம்மூவரும் பிள்ளையார் பட்டியின் அருகருகே கோயில் கொண்டிருப்பது வெகு சிறப்பு. குபேர (லெக்ஷ்மி), ஞான சரஸ்வதி, சந்தோஷிமாதா ஆகிய கோயில்கள் ஒரு சீரற்ற அஃகன்னா போல் அமைந்துள்ளன.
கல்வியும் செல்வமும் இன்றியமையாதன. கல்வியும் செல்வமும் இருந்து குடும்ப ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. குடும்பத்தில் நிரந்தர ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவுவது அத்யாவசியமானதுதானே.
இதற்கு முன் சில இடுகைகளில் இந்த வாஸ்து கோயிலில் இருக்கும் விநாயகர்களைப் பகிர்ந்திருப்பேன். கோயிலில் படம் எடுக்க அனுமதி இல்லையாததால் கடைகளையும் வாஸ்து மீனையும் எடுத்திருந்தேன்.
காரைக்குடியில் இருந்து பதினாலுகிலோமீட்டரில் உள்ள குன்றக்குடியில் இருந்து பிள்ளையார் பட்டி செல்லும் வழியில் இடப்புறம் பிரியும் சாலையில் சிறிது திரும்பி உள்ளே சென்றால் இக்கோயில் அமைந்திருக்கிறது.
தாமரை பீடமும், முன்னே வாஸ்து மீன்கள் நீந்தும் தொட்டியும் இருக்கிறது. மேலேறி சென்றால் குபேரன் சந்நிதி. மிக அருமையான சோலையின் நடுவே அமைந்துள்ள இக்கோயில் தரிசிக்க வேண்டிய ஒன்று. பக்கங்களில் குழந்தைகள் விளையாட பூங்காவும் உள்ளது.
விநாயகருக்கு அருகில் லெக்ஷ்மி , சரஸ்வதி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் புகைப்படங்களில் . அதே போல் சந்தோஷி மாதா விநாயகரின் மகள். இம்மூவரும் பிள்ளையார் பட்டியின் அருகருகே கோயில் கொண்டிருப்பது வெகு சிறப்பு. குபேர (லெக்ஷ்மி), ஞான சரஸ்வதி, சந்தோஷிமாதா ஆகிய கோயில்கள் ஒரு சீரற்ற அஃகன்னா போல் அமைந்துள்ளன.
கல்வியும் செல்வமும் இன்றியமையாதன. கல்வியும் செல்வமும் இருந்து குடும்ப ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. குடும்பத்தில் நிரந்தர ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவுவது அத்யாவசியமானதுதானே.
இதற்கு முன் சில இடுகைகளில் இந்த வாஸ்து கோயிலில் இருக்கும் விநாயகர்களைப் பகிர்ந்திருப்பேன். கோயிலில் படம் எடுக்க அனுமதி இல்லையாததால் கடைகளையும் வாஸ்து மீனையும் எடுத்திருந்தேன்.
காரைக்குடியில் இருந்து பதினாலுகிலோமீட்டரில் உள்ள குன்றக்குடியில் இருந்து பிள்ளையார் பட்டி செல்லும் வழியில் இடப்புறம் பிரியும் சாலையில் சிறிது திரும்பி உள்ளே சென்றால் இக்கோயில் அமைந்திருக்கிறது.
தாமரை பீடமும், முன்னே வாஸ்து மீன்கள் நீந்தும் தொட்டியும் இருக்கிறது. மேலேறி சென்றால் குபேரன் சந்நிதி. மிக அருமையான சோலையின் நடுவே அமைந்துள்ள இக்கோயில் தரிசிக்க வேண்டிய ஒன்று. பக்கங்களில் குழந்தைகள் விளையாட பூங்காவும் உள்ளது.
