எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 ஜூன், 2020

கும்பக்கலசம் இல்லாத தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்

கும்பக்கலசம் இல்லாத தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்


கோபுரம் இருக்கு ஆனா கும்ப கலசம் இல்லை. இப்பிடி ஒரு கோயிலைத் தரங்கம்பாடிக் கடற்கரையில் பார்த்தேன். கோபுரம் முழுமையா இதே அமைப்புலதா கும்பம் இல்லாமக் கட்டப்பட்டிருக்கு. 

கோயிலுக்குப் பின்னாடி வேற பிட்டு பிட்டா கோயில் மண்டபங்கள் இருக்குறமாதிரி தனித்தனிக் கட்டிடங்கள் இருக்கு.


திங்கள், 8 ஜூன், 2020

ஸ்ரீ சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர்.

ஸ்ரீ சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர்.


திருப்புல்லாணிக்கு அருகில் ஸ்ரீ சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் சமுத்திரத்தைப் பார்த்து அமைந்திருக்கிறது.


ஆடி அமாவாசை போன்ற தினங்களில் இங்கேயும் ராமேஸ்வரத்திலும் பிதுர் தர்ப்பணம் நடைபெறும். ஆனால் இங்கே கோயிலுக்கு எதிரே பத்தடியிலேயே கடலும் அதை ஒட்டி சீரற்ற படிகளும் சிதைந்த சிலைகளுமாகக் காட்சி அளிக்கின்றன. நடப்பதே சிரமமாய் இருந்தது.



முதலில் ஒரு விநாயகர் கோயில் அமைந்திருக்கிறது.

சனி, 6 ஜூன், 2020

பிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவன் கோயில்.

பிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவன் கோயில்.

பாப்நாஷ் என்றால் பாவங்களை அழிப்பவர் என்று அர்த்தம். இங்கே வந்து பாப்நாஷ் அருவியில் நீராடி சிவனை வணங்குபவரின் பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. சிவன் ராத்திரி இங்கே ரொம்ப ஸ்பெஷல். ஹைதையிலிருந்து குல்பர்கா சென்றுவிட்டு பிதார் வரும் ( பிதார் - உட்கிர் ) வழியில் இக்கோயிலுக்குச் சென்றோம். காரோட்டி இதன் சிறப்பைச் சொல்லி அழைத்துச் சென்றார். நீளச் செம்மண் பாதை போய்க்கொண்டே இருந்தது. அதன்பின் வந்தது கோயில்.

புதன், 3 ஜூன், 2020

திண்டல் முருகனின் திருமுக தரிசனம்.

திண்டல் முருகனின் திருமுக தரிசனம்.

திண்டல் முருகனின் திருமுகத்தை அழகு பொலியும் அருள் முகத்தை தரிசனம் செய்யணும்னா நீங்க ஈரோட்டுக்குக் கட்டாயம் வந்தே ஆகணும். மலைமேல் குட்டி முருகன் உங்களை எதிர்நோக்கிக் காத்துக்கிட்டு இருக்கார். 

“முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே. “

”கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே என்றொரு சினிமாப் பாட்டு உண்டு. இங்கே ஈரோடு பெருந்துறையிலிருந்து எட்டு கிலோமீட்டரில் குடிகொண்டிருக்கும் குழந்தை வேலாயுதசாமி கோயிலில் இடும்பனும் வணங்கப்படுகிறார். இடும்பனின் மூலம் தமது கோரிக்கைகளைத் தெரிவித்துப் பக்தர்கள் முருகன் அருள் பெறுகிறார்கள்.



திண்டல் முருகன் கோயில் சிறு குன்றின்மேல் அமைந்திருக்கிறது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்தானே. குன்றுதோறாடல்தானே அவனது திருவிளையாடல்.

திங்கள், 1 ஜூன், 2020

மந்த்ராலயத்தில் ஒரு மதியம்.

மந்த்ராலயத்தில் ஒரு மதியம்.

மனதுக்கு மிகவும் பிடித்த மகத்துவபூர்ணமான இடம் மந்த்ராலயம். 

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கர்நாடகா ஆந்திரா பார்டரில் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள மந்த்ராலயத்தின் பிருந்தாவனத்தில் ஜீவசமாதியாகி அருளாட்சி செய்பவர் ராகவேந்திர சுவாமி. அவர் பிறந்தபோது அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திருவேங்கடநாதர். திருப்பதி பெருமாளின் பெயர்.!

ஹைதையில் இருந்தபோது ஒரு முறை ( இது இரண்டாம் முறை – முதல் முறை குழந்தைகள் சின்னவர்களாக இருக்கும்போது சென்றது ). சென்று வந்தோம்.

கர்நாடகாவில் ஏதோ நதிநீர் மின்சாரப் பிரச்சனை காரணமாக அன்று60 கிலோமீட்டர் ரெய்ச்சூரைச் சுற்றிக்கொண்டு சென்றோம். அதனால் மதியம் ஆகிவிட்டது.


நுழைவாயில்

யூ ட்யூபில் 3651 - 3660 வீடியோக்கள். பொறையுடைமை. தினம் ஒரு திருக்குறள்.

யூ ட்யூபில் 3651 - 3660 வீடியோக்கள். பொறையுடைமை. தினம் ஒரு திருக்குறள். 3651.தினம் ஒரு திருக்குறள் - 151 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்...