எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயிலில் மங்களம் தரும் அங்காரகன் குடிகொண்டிருக்கிறார். இங்கே மூலவர் வைத்தியநாதர் , தாயார் தையல்நாயகி, முத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகியோரைத் தரிசித்தல்  விசேஷம். 

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து  வடிந்த  வியர்வைத்துளியில் உதித்தவர் அங்காரகன். அந்தத் துளி கீழே விழாமல் பூமாதேவி தாங்கி வளர்த்ததால் இவர் பூமிகாரனாகவும் திகழ்கிறார். இன்னொரு கதையில் இந்த நெற்றிப் பொறியை அக்கினி கங்கையில் சேர்த்ததால் அங்காரகன் தோன்றினார் என்கிறார்கள். அக்கினி தேவனுக்கும் விகேசிக்கும் பிறந்தவர் அங்காரகன் என்றும் இவர் விநாயகரை வணங்கி  தவமிருந்து அமரபதவி அடைந்தார் என்றும் கூறுகிறது இன்னொரு கதை. உஜ்ஜயினியில் தோன்றியவர் என்றும் கூறுகிறது ஒரு கதை. 

செந்நிறகிரகம்  செவ்வாய்

புள் இருக்கு வேள் ஊர்   என்றால் முருகன், ருக்வேதம் ,கருடன் ( ஜடாயு, சம்பாதி) சூரியன் ஆகியோர்  வணங்கி அருள் பெற்றதாக சொல்கிறார்கள்.

வியாழன், 18 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன்.

நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன்.

கும்பகோணத்தில் இருந்து பதினேழு கிலோமீட்டர்  தூரத்தில் உள்ளது ஆலங்குடி. இறைவன் ஆபத்சகாயேஸ்வரர்.  இறைவி  ஏலவார்குழலி அம்மை.

பாற்கடலைக்கடைந்தபோது வெளிவந்த விஷத்தை இறைவன் அருந்தி தேவர்களைக் காப்பாற்றியதால்  ஆபத்சகாயேஸ்வரர் என்று பெயர். அதனாலேயே இவ்வூருக்கு ஆலங்குடி என்று பெயர்.
ஆலங்குடியில் ஆலமர் ஈசனைத்  தரிசிக்கும் பேறு கிட்டியது. "குரு பார்க்கக் கோடி நன்மை" என்பார்கள். மழையும் இருளும் போட்டிபோட்டுத் தாக்கியபோதும் ஆலங்குடி சென்று  அத்தகைய குருவை அருகே தரிசித்ததில் மிகவும் மகிழ்ந்தோம்.

செவ்வாய், 16 ஜூன், 2020

சொக்கேட்டான் கோயில்

சொக்கேட்டான் கோயில்

 சொக்கேட்டான்  கோயில், சொற்கேட்ட  விநாயகர் ,சொற்கேட்டான்   கோயில், சொல் கேட்ட ஐயா ஆகிய பெயர்களோடு விளங்கும் விநாயகரை சிலநாள் முன்பு தரிசித்தோம்
Sorkettan koil
காரைக்குடிக்குப் பக்கமுள்ள பள்ளத்தூர் வேலங்குடியில் கோயில் கொண்டிருக்கும் இறைவனே சொற்கேட்ட விநாயகர். இவரின் சன்னதி வாசலில் நின்று என்ன வேண்டிக் கொண்டாலும் அது அப்படியே பலிக்கும் என்பதால் பக்தர்களின் சொல் கேட்ட விநாயகர் என்ற பெயர் பொருத்தமாய் விளங்குகிறது. இதைப் பேச்சு வழக்கில் சொக்கேட்டான் கோயில் = சொக்கட்டான் கோயில்  என்கிறார்கள்.

ஞாயிறு, 14 ஜூன், 2020

தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படும் கோயில் இது. இதை பற்றி முன்பேயே பல பதிவுகள்  எழுதி இருக்கிறேன். இப்போ புகைப்படங்கள் மட்டும் பகிர்ந்துள்ளேன்

வெள்ளி, 12 ஜூன், 2020

இந்திராஜான் சேப்பலும், ஸந்தான கணபதி ஸஞ்சீவி ஆஞ்சநேயரும்.

இந்திராஜான் சேப்பலும், ஸந்தான கணபதி ஸஞ்சீவி ஆஞ்சநேயரும்.


காரைக்குடியில் இந்திராஜான் ஹாஸ்பிட்டலைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. செக்காலையில் டாக்டர் சுகுமாரியம்மாவுக்குப் பின்னால் பிரபலமான டாக்டர் இந்திராஜான். இவரது தந்தை மெனா மெனா வீதியில் உள்ள ஜான் மெடிக்கல்ஸ் நடத்திவந்தார் என நினைக்கிறேன். 

எங்கள் தலைமுறையில் பெரும்பாலோர் இந்த உலகுக்கு வந்ததும் பார்த்த முதல் முகம் சுகுமாரியம்மாவுடையதாகத்தான் இருக்கும்.



இந்திராஜானம்மா ஹாஸ்பிட்டல்லுக்குச் சென்றிருந்தபோது இந்த தியான இடத்தைப் பார்த்தேன். ( கல்லூரிகளில் சேப்பல்ஸூன் ஸைலன்ஸ் ) என்று எழுதி இருப்பதன் முழு அர்த்தமும் இங்கே புரிந்தது.

யூ ட்யூபில் 3651 - 3660 வீடியோக்கள். பொறையுடைமை. தினம் ஒரு திருக்குறள்.

யூ ட்யூபில் 3651 - 3660 வீடியோக்கள். பொறையுடைமை. தினம் ஒரு திருக்குறள். 3651.தினம் ஒரு திருக்குறள் - 151 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்...