எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 மார்ச், 2019

குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

திருவாசகம் என்னும் தேன்..:-
********************************
நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க.. என தினமும் பிரதோஷ நேரத்தில் நடராஜப் பெருமானை சிவபுராணம் சொல்லி வணங்குவது நகரத்தார் பழக்கம். சமீப காலங்களாக செட்டிநாட்டுப் பகுதிகளில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது அனைத்து மக்களும் பங்கேற்று வருகிறார்கள்.

பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகத் திகழ்வது திருவாசகம். சாத்திரத்தில் சிறந்தது திருமந்திரம் என்றால் தோத்திரத்தில் சிறந்தது திருவாசகம். பூவின் சாற்றை உறிஞ்சி தேனை எடுத்துச் சேமிப்பது போல சுவை கூடியது திருவாசகம். இதில் 658 பாடல்கள் உள்ளன. இதன் ஆசிரியர் மாணிக்க வாசகர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டவர்.சிவன் என்றாலே மங்களம் என்று பொருள்.: நன்மையைத் தருபவர் என்று பொருள். சிவபெருமானைப் போற்றி செய்து பாடப்பட்டது திருவாசகம். இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தரக்கூடியது. அல்லல் அறுத்து ஆனந்தமயமாகுவது., ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்குவது. திருவாசகத்தை முற்றிலும் ஓதுதல் முற்றோதல். 658 பாடல்களையும் தொடர்ந்து 6 மணி நேரம் பாடுவது ஆகும்.

இதில் 51 பதிகங்கள் உள்ளன.


இந்த ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி காரைக்குடி ஆவுடையான் செட்டியார் வீட்டில் திரு சபாரெத்தினம் செட்டியார் திருவாசம் முற்றோதலுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று முழுமையும் திருவாசத்தேனில் திளைக்கும் பேறு பெற்றோம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என இங்கே பகிர்கிறேன்.

சிவன்., பார்வதி., நால்வர் படமாகவும்., சிறு விக்கிரமாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூமாலைகளாலும்., பாமாலைகளாலும் தோத்திரம் செய்யப்பட்டு., ஒவ்வொரு பாடல் முடிவிலும் நைவேத்தியத்துடன் இருவராக இணைந்து தீப தரிசனம் பார்க்கப்படுகிறது. அதில் கீர்த்தித்திரு அகவல்., சிவபுராணம் ஆகியன படிக்கும் போதும்., ஆனந்தத்து அழுத்தல்., என்ற பதிகம் படிக்கும் போதும் உருகாமல் இருக்க முடியாது. திருவாசகத்திற்கு உருகாதவர் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முன்னோர் வாக்கு


திருவாசத்தைப் படித்து மகிழ்ந்த ஜி.யூ.போப் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அதிலும் ஆனந்தத்து அழுத்தல் பதிகம் பாடும்போது நம்மை ஆனந்தம் வியாபிப்பதை பூரணமாக உணர முடியும். ஒரு குறிப்பிட்ட பதிகத்தை திருவாசகம் முற்றோதல் செய்பவர் தன் குடும்பத்தோடு பாடுகிறார். சிவன் அருளால் அந்தக் குடும்பத்தினர் வந்த சிவனடியார்களுக்கு பனங்கற்கண்டுப் பாலும் வெந்நீரும் வழங்குகிறார்கள். மதிய உணவின் போது மொத்தக் குடும்பமும் சிவனடியார்கள் முன்னிலையில் பந்தி பரிமாறி., சிவனடியார்கள் அமுது செய்து அருள வேண்டும் என்று குடும்பத்தலைவர் சொல்ல மொத்தக் குடும்பமும் விழுந்து வணங்குவது அழகு. சிவனடியார்கள் பூஜிக்கப்படும் இடம் எல்லாம் இல்லதுமாய்., அல்லதுமாய் இருக்கும் சிவனை வணங்கும் இடம்தானே.

சிவபுராணம் படித்தால் மனக்கவலைகள் யாவும் மறைந்து அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். செல்வம் பெருகும். விரோதிகளை அடங்கச் செய்து வெற்றியை நல்கும் பதிகம் ,”திருவுந்தியார்” . ஊமை, திக்குவாய் முதலியன நீங்கி நன்கு பேச ,”திருச்சாழல்” படிக்கவேண்டும். திருவெம்பாவை பாடியதன் பயனாக திருமணத்தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். மக்கட்பேறு இல்லாதவர்கள் ,”கோயில்மூத்த திருப்பதிகம்” படித்தால் குழந்தைகள் கிடைக்கும். பிண்கள் நீங்க ,”நீத்தல் விண்ணப்பம் படிக்கலாம். திருவாசகத்தின் எல்லாப் பதிகங்களுமே நன்மைகள் தரக்கூடியவை.


காரைக்குடியில்,” திருநாவுக்கரசர் இறைப்பணி மன்றம் ” என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அவ்வமைப்பைச் சேர்ந்த அன்பர்கள் எல்லா ஊர்களுக்கும் சென்று திருவாசக முற்றோதல் செய்து வருகிறார்கள். இதுவரை 222 முற்றோதல்கள் நடத்தி இருக்கிறார்கள். திருமணம்., மணிவிழா., சதாபிஷேகம்., புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் அன்பர்கள் தங்கள் இல்லங்களில் இவ்வமைப்பின் மூலம் முற்றோதல்கள் வைக்கிறார்கள்.

இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் எல்லா ஸ்தலங்களுக்கும் சென்று முற்றோதல்கள் செய்து வருகிறார்கள். வீடுகளில் முற்றோதல்கள் நடத்தும் போது நடராஜர்., சிவகாமி அம்மன்., மாணிக்க வாசகர் ஆகிய சிறுவிக்கிரகங்களை வைத்து வழிபட்டு., திருவாசகம் பாடுகிறார்கள். மாணிக்க வாசகருக்கு மலர் வணக்கம் செய்யப்படுகிறது


பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளில் இருந்து ஒவ்வொரு பாடல் பாடப்படுகிறது. அடுத்து திருவாசகம் முழுமையும் படிக்கப்படுகிறது. அதற்கு அடுத்து எட்டாம் திருமுறையில் திருக்கோவையாரில் 1 பாடல் அதன்பின் 9 ஆம் திருமுறையிலிருந்து 12 ஆம் திருமுறை வரை திருமுறைக்கு ஒரு பாடல் வீதம் பாடப்படுகிறது. அத்துடன் முற்றோதல் நிறைவு பெறுகிறது.

திருவாடுதுறை ஆதினம் நடத்திய சைவ சித்தாந்த வகுப்பில் தேவாரம் பயின்ற பலரும் இங்கு திருவாசக முற்றோதல்களில் பங்கேற்கிறார்கள். திருநாவுக்கரசர் இறைப்பணி மன்றத்தின் மூலமாக தேவாரப் பயிற்சி., திருவாசகம் முற்றோதல்., உழவாரப்பணி., சிவன் கோயில்களில் மாதாந்திர ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெறுகிறது. இதன் தலைவர் காரைக்குடி ஈப்போ நாராயணன் செட்டியார் அவர்கள். திரு தெ. சொக்கலிங்கம்., சீனி முத்தையா., பாலாம்பா ஆச்சி ஆகியோர் மிகச் சிறப்பாக சொன்னார்கள். கிட்டத்தட்ட 150 பேர் வரை எல்லா மக்களும் இணைந்து திருவாசகம் ஓதி வருகிறார்கள்.


தாயுமானவன்., மாயப்பிறப்பறுக்கும் மன்னவன்., சிவபெருமானை துதிக்கும் இந்தத் திருவாசக முற்றோதலில் பங்குபெற்று அடைந்த சிவானந்தத் தேன் தெவிட்டாதது. இந்தத் திருவாசகம் என்னும் தேனை எங்களை அடையச் செய்த திருநாவுக்கரசர் இறைப்பணி மன்றத்தினருக்கு நன்றிகள் பல.



டிஸ்கி.1.:- இது என்னுடைய 500 வது இடுகை.:)))))


டிஸ்கி.2.:- நன்றி செப்.2011 குமுதம் பக்திஸ்பெஷல்.:)

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

1 கருத்து:

  1. ராமலக்ஷ்மி21 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:26
    நல்ல பகிர்வு.

    ஐநூறாவது இடுகைக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

    பால கணேஷ்21 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:50
    பக்தி மழையில் மகிழ்வாய் நனைந்தேன். 500வது இடுகை! நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது. இன்னும் பல்லாயிரம் இடுகைகள் நீங்கள் வழங்கி, அதை நாங்கள் படித்து மகிழ வேண்டும். வாழ்த்துக்கள் அக்கா!

    பதிலளிநீக்கு

    r.v.saravanan21 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:16
    ஐநூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்
    ஆயிரமாவது இடுகை க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

    r.v.saravanan21 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:16
    ஆனந்த விகடனில் இன்று கடவுளை நேசித்தேன் என்ற உங்கள் கவிதை படித்தேன் ரொம்ப நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

    பால கணேஷ்21 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:44
    சரவணன் சொன்னதும் விகடன் சென்று கவிதையைப் படித்துப் பார்த்தேன். நன்கு யோசித்துப் பார்த்தால் கடவுளைப் பண்ட மாற்றாகவும், எப்போது எனை உயர்த்துவாய் என்று கேட்டவாறும் இருந்தது உரைக்கிறது. நானும் இறையை நேசித்ததில்லை என ஓர்ந்தேன். ஹாட்ஸ் ஆப் அக்கா!

    பதிலளிநீக்கு

    kaialavuman21 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:09
    500-ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

    rajamelaiyur21 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:45
    Good post . . . Thanks

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்21 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:31
    500 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    //திருவாசகத்திற்கு உருகாதவர் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முன்னோர் வாக்கு//

    ஆம். உண்மை தான்.

    நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.vgk

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:31
    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி கணேஷ்..:)

    நன்றி சரவணன்..:)

    நன்றி வேங்கட ஸ்ரீனிவாசன்

    நன்றி ராஜா

    நன்றி கோபால் சார்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:32
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    ஹேமா22 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 3:02
    மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா !

    பதிலளிநீக்கு

    இராஜராஜேஸ்வரி22 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:58
    சமீப காலங்களாக செட்டிநாட்டுப் பகுதிகளில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது அனைத்து மக்களும் பங்கேற்று வருகிறார்கள்/

    கோவையிலும் இரத்தினவிநாயகர் ஆலயத்தில் மாதந்தோறும்
    திருவாசக முற்றோதல் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

    பங்கேற்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

    இராஜராஜேஸ்வரி22 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:58
    ஐநூறாவது இடுகைக்கு
    அன்பான வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்24 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:53
    நல்ல பகிர்வு அக்கா...

    500 இடுகைக்கும் வாழ்த்துக்கள் அக்கா...

    தொடருங்கள்... தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:04
    நன்றி ஹேமா

    நன்றி ராஜி

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan1 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:05
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.